ரூ. 5 கோடி மதிப்பிலான கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்த மும்பை போலீசார்

சென்னையில் இருந்து கடத்தி மகாராட்டிரம் மாநிலத்திற்கு கொண்டு செல்லப்பட்ட ரூ. 5 கோடி மதிப்பிலான பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 7, 2018, 12:00 PM IST
ரூ. 5 கோடி மதிப்பிலான கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்த மும்பை போலீசார் title=

விலை உயர்ந்த ஸ்மார்ட் மொபைல் போன்கள், கைக்கடிகாரங்கள், ப்ளுடூத் உட்பட பல கோடி மதிப்பிலான பொருட்கள் சென்னையில் இருந்து கடத்தி ரயில் வழியாக மும்பை சத்ரபதி சிவாஜி ரயில்வே ஸ்டேஷனுக்கு வருவதாக மும்பை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து உஷார் ஆனா மும்பை போலீசார் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் சந்தேகத்துக்குறிய நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் முரணாகவே பதில் அளித்துள்ளார். அவரின் பதிலை கேட்டு போலீசாருக்கு மேலும் சந்தேகம் வலுத்தது. அவனிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டதில் சென்னையில் இருந்து பொருட்கள் கடத்தியதை ஒப்புக்கொண்டான். அவனிடம் இருந்து 17 ஆயிரம் மொபைல் ஸ்கிராட்ச் கார்டுகள், பத்தாயிரம் கைக்கடிகாரங்கள் மற்றும் ஆறாயிரம் ப்ளுடூத் ஸ்பீக்கர்கள் மீட்கப்பட்டன. இதன் மதிப்பு கிட்டத்தட்ட சுமார் ரூ. 5 கோடி இருக்கும் என போலீசார் தகவல் தெரிவித்தனர். 

கடத்தலில் ஈடுப்பட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்

Trending News