Shani Jayanti 2022: 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ராசிக்கு பணக்கார யோகம்

Shani Jayanti 2022: சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சனி ஜெயந்தி நாள் சிறப்பு வாய்ந்தது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 29, 2022, 09:13 AM IST
  • இந்த ராசிக்காரர்களுக்கான சனி ஜெயந்தி சிறப்பு
  • சனி ஜெயந்தி இந்த ஆண்டு மே 30
  • சூரிய பகவானின் மகன் சனி பகவான்
Shani Jayanti 2022: 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ராசிக்கு பணக்கார யோகம் title=

சாஸ்திரங்களின்படி, சனி ஜெயந்தி இந்த ஆண்டு மே 30 அன்று கொண்டாடப்படுகிறது. சூரிய பகவானின் மகன் சனி பகவான், வைகாசி மாத அமாவாசை நாளில் பிறந்தார். ஜோதிடத்தில் சனி ஜெயந்திக்கு சிறப்பு உண்டு. இந்த ஆண்டு சனி ஜெயந்தி அன்று சர்வார்த்த சித்தி யோகமும் உருவாகிறது. சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நாள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்நாளில் மேற்கொள்ளப்படும் செயல்களுக்கு இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த ஆண்டு சனி ஜெயந்தி மூன்று ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும்.

சர்வார்த்த சித்தி யோகத்தின் உருவாக்கம்-
சனி ஜெயந்தி அன்று காலை 07.13 மணிக்கு சர்வார்த்த சித்தி யோகம் தொடங்கி மே 31 காலை 05.27 வரை நீடிக்கும். சனி ஜெயந்தி அன்று சனிபகவானின் ஆசியைப் பெற, இந்த முஹூர்த்தத்தில் வழிபடுவது நன்மை பயக்கும். இது தவிர, சனி பகவான் தனது சொந்த ராசியான கும்பத்தில் இருப்பார், சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இதுபோன்ற ஒரு தற்செயல் நிகழ்வு செய்யப்படுகிறது.

மேலும் படிக்க | மே மாததின் கடைசி வாரம் இந்த ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும்

இந்த ராசிக்காரர்களுக்கான சனி ஜெயந்தி சிறப்பு-

மேஷம் ராசி: சனி ஜெயந்தி உங்களுக்கு மங்களகரமானதாக இருக்கும். சனிபகவான் உங்கள் ராசிக்கு 11ம் வீட்டில் சஞ்சரித்திருப்பதால். இது லாபம் மற்றும் வருமானத்தின் இடம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் நீங்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் லாபம் பெறலாம். பணம் வருவதற்கான பாதை திறக்கும். தொழிலில் முன்னேற்றம் அடையலாம். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம்.

ரிஷபம் ராசி: சனி ஜெயந்தி ரிஷப ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். சனிபகவான் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் சஞ்சரித்துள்ளார். இது பணியிடம் மற்றும் வேலை உணர்வு என்று அழைக்கப்படுகிறது. தொழிலில் வெற்றி பெறுவீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும்.

தனுசு ராசி: தனுசு ராசிக்காரர்களே, சனி ஜெயந்தி உங்களுக்கு விசேஷமாக இருக்கும். தனுசு ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியில் இருந்து விடுதலை கிடைக்கும். முன்னேற்றப் பாதைகள் திறக்கும், உங்கள் தைரியமும் வலிமையும் அதிகரிக்கும். பணியிடத்தில் மரியாதை பெறலாம். பழைய நோய்களில் இருந்து விடுபடுவீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் நிலுவையில் உள்ள சில வேலைகளை முடிக்கலாம். சகோதர சகோதரிகளுக்கு முழு ஆதரவு கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )

மேலும் படிக்க | மீனத்தில் குருபகவான்: இந்த 3 ராசிகளின் வாழ்வில் மகிழ்ச்சி மழையாய் பொழியும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News