முகப்பருக்களை உடனே போக்க வேண்டுமா?... இயற்கை வைத்தியத்தை ஃபாலோ பண்ணுங்க

முகப்பருக்களை போக்குவதற்கு இயற்கை வைத்தியத்தை பின்பற்றலாம்.  

Written by - க. விக்ரம் | Last Updated : Sep 1, 2022, 12:30 PM IST
  • முகப்பருக்களை உடனே அகற்ற வழிகள்
  • கெமிக்கல் மருந்துக்கு பதிலாக இயற்கையான முறையை பின்பற்றலாம்
  • தக்காளி முகப்பருவை போக்க முக்கிய பங்கு வகிக்கிறது
 முகப்பருக்களை உடனே போக்க வேண்டுமா?... இயற்கை வைத்தியத்தை ஃபாலோ பண்ணுங்க title=

இளமைப் பருவத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் முகத்தில் பரு வருவது இயற்கைதான். ஆனால், பரு வந்தால் நம்முடைய முகத்தின் அழகே மறைந்துவிடும். இதனால் யாரும் பருக்களை விரும்புவதில்லை. எனவே அதனை போக்குவதற்காக கெமிக்கல் கலந்த மருந்துகளை பூசுவதும் வழக்கம். அப்படி செய்யும்பட்சத்தில் அது தோலுக்கு பிரச்னையை ஏற்படுத்தும் எனவே பருக்களை போக்குவதற்க எளிய வழிகளில் இயற்கை வைத்தியம் இருக்கிறது.

தக்காளி சருமத்தை சுத்தப்படுத்தி அழகாக வைத்துக்கொள்ள உதவும் சிறப்பான மருந்து. தினமும் சிறு சிறு தக்காளி துண்டுகளைக் கொண்டு சிறிது நேரம் முகத்தில் மசாஜ் செய்து கழுவினால் முகப்பருக்களும், அதனால் ஏற்பட்ட தழும்புகளில் இருந்தும் விடுபடலாம். கிராம்பும், பருக்களை குணப்படுத்தும் ஒரு மருந்து. கிராம்பை நீரில் போட்டு கொதிக்க வைத்து பின்னர் குளிர வைக்க வேண்டும். குளிர வைத்த கிராம்பை அரைத்து பருக்கள் உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் பருக்கள் ஒழிந்துவிடும்.

மேலும் படிக்க | மின்சார சுவிட்ச் போர்டை சூப்பராக சுத்தம் செய்ய இவ்வளவு சுலபமான வழி இருக்கா?

அதுமட்டுமின்றி, வாழைப்பழத்தின் தோலை அரைத்து அதனுடன் குறைந்தளவு தயிர் சேர்த்து முகத்திற்கு தடவி ஊற வைத்து பின்னர் கழுவினால் முகப்பரு மற்றும் தழும்புகளிலிருந்து விடுபடலாம். சிறந்த மருந்தாக பயன்படும் தேனும் பருக்களுக்குரிய மருந்துதான். பருக்கள் உள்ள இடங்களில் தேனை தடவி சிறிது நேரம் ஊற வைத்த பிறகு பால் கொண்டு கழுவி, குளிர்ந்த நீரில் கழுவினால் பருக்களை போக்கலாம். 

கடலை மாவு, சந்தனப் பொடி, தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து முகத்திற்கு தடவி ஊற வைத்து கழுவினால் பருக்கள் நீங்கும். தலைவலிக்கு நாம் செய்யும் பழக்கம் ஆவி பிடிப்பது. இதன் மூலம் பருக்களையும் போக்கலாம். நம் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளை போக்க ஆவிப்பிடிப்பதும் முக்கியமான ஒன்று. 

மேலும் படிக்க | ஆரோக்கியத்திற்கு உகந்த இந்த காய்கறிகளே உடல்நலனுக்கு எதிராகும்! அதிர்ச்சி தரும் காய்கள்

ஆவிப்பிடித்தால் முக துவாரங்கள் திறந்து, அதிலுள்ள அழுக்குகள், இறந்த செல்கள் தளர்ந்துவிடும். இதன் மூலமாக மாசு நிறைந்த இறந்த செல்கள் முழுவதுமாக வெளியேறி பருக்கள் போக்கப்படும்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News