திருப்பதி லட்டு விலை இருமடங்காக உயர்வு!

திருப்பதி கோயிலில் சிபாரிசு கடிதங்களுக்கு வழங்கப்படும் லட்டு, வடையின் விலை இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. 

Last Updated : Dec 21, 2017, 12:59 PM IST
திருப்பதி லட்டு விலை இருமடங்காக உயர்வு! title=

திருப்பதி கோயிலில் சிபாரிசு கடிதங்களுக்கு வழங்கப்படும் லட்டு, வடையின் விலை இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. 

திருப்பதி கோயிலுக்கு தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அந்த வகையில் வரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழக்கப்பட்டு வருகிறது. இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு ரூ.10க்கு 2 லட்டுகளும், மலைபாதையில் வரும் பக்தர்களுக்கு ரூ. 10க்கு 2 லட்டுகளும், கூடுதலாக ரூ.25க்கு 1 லட்டு என வழங்கப்படுகின்றன. மேலும் ரூ.50, ரூ.300 ஆகிய கட்டணங்களில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு 2 மற்றும் 3 லட்டுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

இந்நிலையில் தற்போது சிபாரிசு கடிதங்களுக்கு வழங்கப்படும் லட்டு உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் சிறிய லட்டு விலை ரூ.25ல் இருந்து ரூ.50 ஆகவும், பெரிய லட்டு விலை ரூ.100ல் இருந்து ரூ.200 ஆகவும் உயர்ந்துள்ளது.

Trending News