மலிவு விலையில் தங்கம் வாங்க வாய்ப்பு.... தங்கப்பத்திரம் விற்பனை இன்று தொடக்கம்!

தங்கத்தை சந்தையை விட மலிவாகவும், அரசு விலையிலும் வாங்க விரும்பினால், அதற்கான பொன்னான வாய்ப்பு உங்களுக்கு உள்ளது. இன்று முதல் அதாவது செப்டம்பர் 11ஆம் தேதி முதல் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தங்கத்தை மலிவான விலையில் விற்க உள்ளது. மத்திய அரசின் தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டம் ( Sovereign Gold Bond Scheme - SGB) ரிசர்வ் வங்கி மூலம் வெளியிடப்படுகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 11, 2023, 11:07 AM IST
  • தங்கப் பத்திரத்தின் முதிர்வு காலம் 8 ஆண்டுகள் ஆகும்.
  • தங்கப் பத்திரம் வாங்குவது தொடர்பான முக்கிய விஷயங்கள்.
  • முதலீட்டாளர்கள் ஒரு கிராம் முதல் அதிகபட்சம் 4 கிலோ வரையிலான தங்கப் பத்திரங்களை வாங்கலாம்.
மலிவு விலையில் தங்கம் வாங்க வாய்ப்பு.... தங்கப்பத்திரம் விற்பனை இன்று தொடக்கம்! title=

தங்கத்தை சந்தையை விட மலிவாகவும், அரசு விலையிலும் வாங்க விரும்பினால், அதற்கான பொன்னான வாய்ப்பு உங்களுக்கு உள்ளது. இன்று முதல் அதாவது செப்டம்பர் 11ஆம் தேதி முதல் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தங்கத்தை மலிவான விலையில் விற்க உள்ளது. மத்திய அரசின் தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டம் ( Sovereign Gold Bond Scheme - SGB) ரிசர்வ் வங்கி மூலம் வெளியிடப்படுகிறது. அதன் கீழ், 2023-24ம் ஆண்டிற்கான 2ம் கட்ட தங்கபத்திரம் விற்பனை இன்று முதல், அதாவதுசெப்டம்பர் 11ம் தேதி  துவங்குகிறது. தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5923 ஆகும். ஒருவர் 4000 கிராம் வரை முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தின் கீழ், முதலீட்டாளர்கள் செப்டம்பர் 11 மற்றும் 15 ஆம் தேதிக்குள் சவரன் தங்கப் பத்திரத்தை வாங்கலாம் அல்லது முதலீடு செய்யலாம். இதனுடன், இத்திட்டத்தின் கீழ் தங்கம் வாங்கும் மக்களுக்கு அரசு தள்ளுபடியும் வழங்குகிறது.

ஒரு கிராம் தங்கத்தை ரூ.5,923க்கு வாங்கலாம்

இந்தத் திட்டத்தின் கீழ்,  யார் வேண்டுமானாலும் தங்கப் பத்திரத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். இதற்கான வெளியீட்டு விலையை ஒரு கிராமுக்கு ரூ.5,923 என ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது. அதாவது இம்முறை ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5,923 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி ஆன்லைன் மூலம் வாங்குபவர்களுக்கு ரிசர்வ் வங்கி தள்ளுபடி வழங்குகிறது. ரிசர்வ் வங்கி இந்த திட்டத்தைப் போன்று ஆன்லைனில் பணம் செலுத்தினால் ரூ.50 தள்ளுபடி வழங்குகிறது. அதாவது ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.5,873 மட்டுமே செலுத்த வேண்டும்.

தங்க பத்திர முதலீட்டிற்கு தொகைக்கு 2.5 சதவீதம் ஆண்டு வட்டி ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படும். எட்டு ஆண்டுகள் கழித்து அன்றயை 24 காரட் தங்கத்தின் விலைக்கு நிகரான முதிர்வு தொகை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஆதார் அட்டை, பான்கார்டு, வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் நகல் உடன் அருகேயுள்ள தபால் துறை அலுவலகத்தில் பதிவு செய்தும் பெற்றுக் கொள்ளலாம்.

முதலீட்டாளர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட், தபால் நிலையங்கள், அங்கீகரிக்கப்பட்ட பங்குச் சந்தைகள், என்எஸ்இ மற்றும் பிஎஸ்இ ஆகியவற்றில் தங்கப் பத்திரங்களை வாங்கலாம். சிறிய நிதி வங்கிகள் மற்றும் பேமெண்ட் வங்கிகள் மூலம் தங்கப் பத்திரங்கள் விற்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதில், முதலீட்டாளர்கள் ஒரு கிராம் முதல் அதிகபட்சம் 4 கிலோ வரையிலான தங்கப் பத்திரங்களை வாங்கலாம். ஒரு அறக்கட்டளை அல்லது எந்த நிறுவனமும் அதிகபட்சம் 20 கிலோ வரை தங்கப் பத்திரங்களை வாங்க முடியும். தங்கப் பத்திரம் என்பது ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் அரசுப் பத்திரம். மத்திய அரசின் முயற்சியால் 2015-ம் ஆண்டு ரிசர்வ் வங்கியால் தொடங்கப்பட்டது.

மேலும் படிக்க | ரேஷன் கார்டுதாரர்களுக்கு இன்று முதல் ஜாக்பாட்.. உடனே இதை படியுங்கள்

தங்கப் பத்திரம் வாங்குவது தொடர்பான முக்கிய விஷயங்கள்

1. தங்க பத்திர காலத்தின் முந்தைய வாரத்தின் கடைசி மூன்று வேலை நாட்களில் 999 தூய்மையான தங்கத்தின் சராசரி விலையின் அடிப்படையில் தங்கப் பத்திரத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

2. 999 தூய்மையான தங்கத்தின் விலையை இந்திய புல்லியன் மற்றும் ஜூவல்லர்ஸ் அசோசியேஷன் (IBJA) வெளியிட்டுள்ளது.

3. ஆன்லைன் ஷாப்பிங்கில் முதலீட்டாளர்கள் 50 ரூபாய் தள்ளுபடி பெறுகிறார்கள்.

4. இந்தத் திட்டத்தின் கீழ், முதலீட்டாளர்கள் ஒவ்வொரு அரையாண்டுக்கும் ஆண்டுக்கு 2.5 சதவிகிதம் என்ற விகிதத்தில் முதலீட்டின் பெயரளவு மதிப்பில் வட்டி பெறுகிறார்கள்.

5. தங்கப் பத்திரத்தின் முதிர்வு காலம் 8 ஆண்டுகள் ஆகும், ஆனால் முதலீட்டாளர்கள் குறிப்பிட்ட சூழ்நிலையில் முதிர்வுக்கு முன் பணத்தை எடுக்கலாம். பணத்தை எடுக்க, முதலீடு செய்து குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தேவை.

தங்க பத்திரம் மீதான வரி

வருமான வரிச் சட்டம், 1961 (43 இன் 1961) விதியின்படி, SGB என்னும் தங்க பத்திரம் மீதான வட்டிக்கு வரி விதிக்கப்படும். ஒரு தனிநபருக்கு பத்திரங்களை திரும்ப பெறும் போது கிடைக்கும் மூலதன ஆதாயத்துக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. எஸ்ஜிபியை மாற்றும்போது எந்தவொரு நபருக்கும் ஏற்படும் நீண்ட கால மூலதன ஆதாயங்களுக்கு குறியீட்டு நன்மைகள் வழங்கப்படும். SGBகள் வர்த்தகத்துக்கு தகுதியுடையதாக இருக்கும்.

மேலும் படிக்க | இரவு நேர ரயில் பயண விதிகளில் மாற்றம்: இனி இந்த நேரத்தில் தூங்க முடியாது.. முக்கிய தகவல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News