இந்தியாவில் உள்ள புலிகளில் எண்ணிக்கை கனிமசமாக உயர்வு!

சர்வதேச புலிகள் தினமான இன்று, இந்தியாவில் வசிக்கும் புலிகளின் எண்ணிக்கை, சரணாலயங்களின் நிலை குறித்த அறிக்கையை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.

Last Updated : Jul 29, 2019, 01:37 PM IST
இந்தியாவில் உள்ள புலிகளில் எண்ணிக்கை கனிமசமாக உயர்வு! title=

சர்வதேச புலிகள் தினமான இன்று, இந்தியாவில் வசிக்கும் புலிகளின் எண்ணிக்கை, சரணாலயங்களின் நிலை குறித்த அறிக்கையை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.

வனத்தின் வளம் பெருக அடிப்படை ஆதாரமாக உள்ள புலிகளின் எண்ணிக்கை, இந்தியாவில் 2000-வது ஆண்டில் கடுமையாக சரிந்து 1700-ஆக இருந்தது. இதனை அடுத்து மத்திய, மாநில அரசுகள் சுதாரித்து, தேசிய விலங்கான புலிகளை காத்து அதன் எண்ணிக்கையை பெருக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தன.

இதன் விளைவாக இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கை கடந்த முறை கணக்கெடுப்பில் 2,226-ஆக அதிகரித்தது. இது உலக அளவில் உள்ள மொத்த புலிகளின் எண்ணிக்கையில் 70% ஆகும்.

இந்த நிலையில், சர்வதேச புலிகள் தினமான இன்று இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கை, சரணாலயங்களின் தர மதிப்பீடு ஆகிய தகவல்கள் கொண்ட அறிக்கையை பிரதமர் மோடி இன்று வெளியிட்டார்.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படும் கணக்கெடுப்பின் படி, கடந்த 2018-ம் ஆண்டில் இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கை 2967-ஆக உயர்ந்தது. 

சுமார் 3,000 புலிகளுடன், உலகிலேயே அதிக புலிகள் வசிக்கும் பாதுகாப்பான நாடாக இந்தியா திகழ்வதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள ஆனமலை, களக்காடு - முண்டந்துறை, சத்தியமங்கலம் மற்றும் முதுமலை ஆகிய 4 சரணாலயங்களும் 82.03 புள்ளிகளுடன் மிக நன்று பிரிவில் இடம்பிடித்துள்ளது. சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்திற்கு விருதும் வழங்கப்பட்டது.

முன்னதாக கடந்த 2014-ஆம் ஆண்டு கணெக்கெடுப்பில் 2226 புலிகள் இந்தியாவில் இருந்துள்ளன. இதுவே, 2010-ஆம் ஆண்டு 1706-ஆகவும், 2006-ல் 1411 ஆகவும் குறைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News