புத்திசாலி புதனும் சனியுடன் இணைந்தால் இந்த 3 ராசி பெண்களுக்கு கொண்டாட்டம் தான்

புத்திக்காரகரான புதனும் கர்மாவின் அடிப்படையில் பலனை கொடுக்கும் சனியும் இணைந்தால் மகிழ்ச்சி பொங்கி, துன்பம் மங்கும் 3 ராசிகள் இவைதான்.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 31, 2022, 08:31 PM IST
  • புதனும் சனியும் இணைந்தால் வெற்றி பெறும்
  • சுப கிரகங்கள் அனுகூலமாக உள்ளவர்கள்
  • பண ஆசை உள்ள பெண்களின் ராசி
புத்திசாலி புதனும் சனியுடன் இணைந்தால் இந்த 3 ராசி பெண்களுக்கு கொண்டாட்டம் தான் title=

 புதுடெல்லி: ஜோதிட சாஸ்திரத்தின்படி, சுப கிரகங்களின் அருள் கிடைத்தால் அதிர்ஷ்டம் அருமையான பலன்களைக் கொடுக்கும். சுப கிரகங்கள் அனுகூலமாக உள்ளவர்கள், தங்கள் புத்திசாலித்தனத்தாலும், கடின உழைப்பாலும் மகத்தான வெற்றிகளைப் பெறுவார்கள்.

ஜோதிடத்தின் படி ஜாதகத்தில் கிரகங்களின் நிலைகள் வாழ்க்கையின் நிலை மற்றும் திசையை மாற்றுகின்றன. கிரகங்கள் வலுப்பெற்று சுப இடங்களில் இருக்கும்போது, ​​வாழ்க்கையில் சிறப்பான வெற்றி கிடைக்கும். 

ஒவ்வொரு கிரகத்தின் நிலைமை மற்றும் அது கொடுக்கும் பலன்களைப் பொறுத்து ஒரு நபரின் இயல்பு, ஆளுமை மற்றும் எதிர்காலம் நிர்ணயிக்கப்படுகிறது.

புதன் மற்றும் சனி முறையே புத்திசாலித்தனம் மற்றும் கர்மாவுடன் தொடர்புடைய கிரகங்கள். புத்திசாலித்தனத்தாலும், உழைப்பாலும் உயர்ந்த பதவிகளை அடையும் அந்த ராசி பெண்களைப் பற்றி நாம் அறிவோம்.

மேலும் படிக்க | சனியின் வீட்டிற்கு விருந்தினராக செல்லும் செவ்வாய் பகவான்! துக்கப்படப் போகும் 7 ராசிகள்

மிதுனம்
ஜோதிட சாஸ்திரப்படி மிதுன ராசியைச் சேர்ந்த பெண்கள் பண ஆசை உள்ளவர்கள். இந்த ராசியைச் சேர்ந்த பெண்கள் தொழிலில் வெற்றி பெறுவார்கள். அவர்களுக்கு வியாபாரத்தில் நிறைய பணம் சம்பாதிக்க முடியும். 
புதன் மற்றும் சனி மிதுன ராசியில் செல்வாக்கு செலுத்துகின்றன. இதன் காரணமாக இந்த ராசியைச் சேர்ந்த பெண்கள் மிக வேகமாக செயல்படுவார்கள் என்பதுடன் கடின உழைப்பாளிகளாகவும் இருப்பார்கள்.

கன்னி ராசி
கன்னி ராசி பெண்கள் புத்திசாலிகள். இந்த ராசி பெண்கள் பணம் சம்பாதிக்கும் ஆசை கொண்டவர்கள். அவர்கள் பிறர் மனம் கவரும் பேசும் கலை அறிந்தவர்கள்.  மற்றவர்களிடமிருந்து வேறுபட்ட இந்த பண்பு அவர்களுக்கு ஆக்கப்பூர்வமான நன்மைகளைத் தரும்.
கடின உழைப்பு மற்றும் புத்திசாலித்தனம் காரணமாக, மிதுன ராசிப் பெண்கள் எடுத்த  ஒவ்வொரு வேலையிலும் வெற்றி பெறுகிறார்கள். கன்னி ராசி பெண்களுக்கு புதன் மற்றும் சனீஸ்வரரின் அருள் உண்டு. இதன் காரணமாக இந்த ராசியைச் சேர்ந்த பெண்கள் கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள். மேலும் உணர்ச்சிவசப்படும் இயல்பு கொண்டவர்களாய் இருப்பார்கள்.

மகரம்
ஜோதிட சாஸ்திரப்படி, மகர ராசியின் அதிபதி சனி தேவன். எனவே இந்த ராசி பெண்களுக்கு சனிபகவானின் சிறப்பு அருள் கிடைக்கும். எனவே, இந்த ராசியைச் சேர்ந்த பெண்கள் தங்கள் தொழிலில் உயர் நிலையை அடைகிறார்கள். மேலும், அவர்களுக்கு ரிஸ்க் எடுப்பது என்பது ரஸ்க் சாப்பிடுவது போன்றது. மேலும், தங்கள் தொழிலில் நிறைய வெற்றிகளைப் பெறுபவர்களாக திகழ்பவர்கள் மகர ராசிப் பெண்கள்.

மேலும் படிக்க | சனியின் வீட்டிற்கு விருந்தினராக செல்லும் செவ்வாய் பகவான்! துக்கப்படப் போகும் 7 ராசிகள் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News