தினமும் இந்த மஞ்சள் நீரை குடியுங்கள், பெல்லி சட்டுனு ஒல்லி ஆகிவிடும்

Weight Loss Water: உடல் எடையை குறைக்க மக்கள் பல முயற்சிகளை மேற்கொள்கின்றனர். ஆனால் இந்த தண்ணீரை தொடர்ந்து குடிக்க ஆரம்பித்தால், 2 வாரங்களில் உங்கள் எடை குறைய ஆரம்பிக்கும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 8, 2023, 01:09 PM IST
  • உடல் எடையை குறைக்கும் தண்ணீரை இப்படி செய்து குடியுங்கள்.
  • பெருஞ்சீரகம் மற்றும் வெந்தய நீரின் நன்மைகள்.
  • உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
தினமும் இந்த மஞ்சள் நீரை குடியுங்கள், பெல்லி சட்டுனு ஒல்லி ஆகிவிடும் title=

உடல் எடையை குறைக்க பெருஞ்சீரகம் மற்றும் வெந்தயம்: எடை அதிகரிப்பு மற்றும் தொங்கும் தொப்பை போன்ற பிரச்சனைகளால் பலர் சிரமப்படுகிறார்கள். உடல் ஆரோக்கியமாக இருந்தும் அவர்களின் எடை குறைவதில்லை. சில சமயம் டயட்டை மாற்றினாலும் பெரிய பலன் இருக்காது. சிலர் இதற்காக ஆபரேஷன் செய்ய கூட தயாராக உள்ளனர். தொங்கும் தொப்பை உங்கள் ஆளுமையை மோசமாக்குகிறது. ஆனால் தினமும் காலையில் இந்த தண்ணீரை குடிக்க ஆரம்பித்தால், உங்கள் எடையை மிக எளிதாக குறைக்கலாம். ஆம், நாம் வெந்தயம் மற்றும் பெருஞ்சீரகம் தண்ணீர் பற்றி பேசுகிறோம். இந்த இரண்டு மசாலாப் பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் தண்ணீர் உடலுக்கு பல வழிகளில் நன்மை பயக்கும். அது தொடர்பான பலன்கள் மற்றும் இந்த நீரை தயாரிக்கும் முறை இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்.

உடல் எடையை குறைக்கும் தண்ணீரை இப்படி செய்து குடியுங்கள்| (Make special Weight Loss Water like this):
முதலில் 1 டீஸ்பூன் பெருஞ்சீரகம் மற்றும் 1 டீஸ்பூன் வெந்தயத்தை 1 கப் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
காலையில் எழுந்ததும் பெருஞ்சீரகம் மற்றும் வெந்தயத்தை வடிகட்டி தனியே எடுத்து வைக்கவும். இப்போது நீங்கள் மீதமுள்ள தண்ணீரை மட்டுமே குடிக்க வேண்டும்.
இந்த தண்ணீர் கசப்பாக இருந்தால், அதில் தேன் சேர்த்துக்கொள்ளலாம்.
தண்ணீர் குடித்த பிறகு, இந்த ஊறவைத்த விதைகளை மென்று சாப்பிடலாம். இது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.

மேலும் படிக்க | வேகமாக முடி வளர வேண்டுமா? ‘இந்த’ மூலிகைகளை ட்ரை பண்ணி பாருங்க!

பெருஞ்சீரகம் மற்றும் வெந்தய நீரின் நன்மைகள் (Benefits of Fenugreek and Fennel Water):

நச்சு நீக்கும் மருந்து
தினமும் காலையில் வெறும் வயிற்றில் பெருஞ்சீரகம் மற்றும் வெந்தயம் தண்ணீர் குடித்து வந்தால் உடலில் உள்ள நச்சுத்தன்மை நீங்கும். உடலில் இருந்து அனைத்து வகையான கழிவுகளும் படிப்படியாக வெளியேறும். ஆனால் இந்த தண்ணீரை 15 நாட்களுக்கு மேல் தொடர்ந்து குடிக்கக் கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
வெந்தயம் மற்றும் பெருஞ்சீரகம் இரண்டிலும் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. எனவே அவை நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வெந்தயம் மற்றும் பெருஞ்சீரகம் தண்ணீர் குடிப்பதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

செரிமான அமைப்பு
வெந்தயம் மற்றும் பெருஞ்சீரகம் தண்ணீர் செரிமான அமைப்புக்கு ஒரு வரப்பிரசாதம். இது வயிற்றை சுத்தமாக வைத்து, செரிமான செயல்முறையை எளிதாக்குகிறது. இதை குடிப்பதால் மலச்சிக்கல், அமிலத்தன்மை மற்றும் வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகளில் இருந்து விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

எடை இழப்புக்கு பயனுள்ளதாக இருக்கும்
வெந்தயம் மற்றும் பெருஞ்சீரகம் தண்ணீரை தொடர்ந்து குடித்து வந்தால் உடல் எடையை குறைக்கலாம். இது எடை இழப்பு செயல்முறையை இன்னும் எளிதாக்குகிறது. சிறந்த முடிவுகளுக்கு, நீங்கள் அதன் விதைகளை மென்று சாப்பிடலாம்.

மேலும் படிக்க | இரவு உணவை தவிர்த்தால் உடல் எடை வேகமாக குறையுமா? பதில் இதுதான்!

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News