இந்தியா வந்தடைந்த அதிபர் டொனால்டு ட்ரம்பை கௌரவப்படுத்திய அமுல் நிறுவனம்!

அரசுமுறை பயணமாக இந்தியா வந்த டொனால்டு ட்ரம்பை கௌரவிக்கும் வகையில் அமுல் நிறுவனம் தனது அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது!!

Last Updated : Feb 24, 2020, 01:56 PM IST
இந்தியா வந்தடைந்த அதிபர் டொனால்டு ட்ரம்பை கௌரவப்படுத்திய அமுல் நிறுவனம்! title=

அரசுமுறை பயணமாக இந்தியா வந்த டொனால்டு ட்ரம்பை கௌரவிக்கும் வகையில் அமுல் நிறுவனம் தனது அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது!!

முதல்முறையாக இந்தியாவில் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மனைவி மெலானியா ட்ரம்புடன் இந்தியா வந்தடைந்தார். காலை 11.40 மணியளவில் தரையிறங்கும் எனக் கூறப்பட்டிருந்த அமெரிக்க அதிபரின் சிறப்பு தனி விமானம் ஏர்போர்ஸ் -1, 11.37 மணிக்கே அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் தரையிறங்கியது.

அதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே பிரதமர் மோடி அகமதாபாத் வந்தடைந்தார். பாதுகாப்பு குழுவினர் இறங்கிய பின்னர், மனைவி மெலானியாவுடன் விமானத்திலிருந்து இறங்கி வந்த அமெரிக்க அதிபர் டிரம்பை, பிரதமர் மோடி ஆரத் தழுவி வரவேற்றார். அதன் பின்னர் டிரம்ப் இணையருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியுடன் இணைந்து சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்த அமெரிக்க அதிபர், இரு புறமும் அரங்கேறிய பாரம்பரிய நடனங்களை பார்வையிட்டார்.

பின்னர் அங்கு தயாராக நின்றிருந்த பீஸ்ட் காரில் ஏறி அமெரிக்க அதிபரும், அவரது மனைவியும் சபர்மதி ஆசிரமம் நோக்கி புறப்பட்டனர். செல்லும் வழி எங்கும் அவர்களுக்கு ஒவ்வொரு மாநிலத்தின் பாரம்பரியத்தை விளக்கும் வகையிலான கலை நிகழ்ச்சிகள் மூலம் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தியா வந்துள்ள டொனால்ட் டிரம்ப், அவரது மனைவி மற்றும் முதல் பெண்மணி மெலனியா டிரம்ப் ஆகியோருடன் மகள் இவான்கா மற்றும் மருமகன் ஜாரெட் குஷ்னருடன் விருந்தளிக்கும் வகையில், அமுல் நிறுவனம் தனது அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அதில், பாரம்பரிய உடையை அணிந்த அமுல் பெண் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒரு டூடுலைப் பகிர்ந்து கொண்டார். அவர் அகமதாபாத்தில் உள்ள மோட்டேரா ஸ்டேடியத்தின் பின்னணியுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு வெண்ணெய் சிற்றுண்டி வழங்குவதாகக் காட்டப்பட்டுள்ளது. 'நமஸ்கே, ஜனாதிபதி டிரம்ப்' என அந்த பதிவில் குறிப்பிடபட்டுள்ளது. 

இந்தியா வந்தடைந்த டிரம்ப் சபர்மதி ஆசிரமம் நோக்கி அமெரிக்க அதிபர் காரில் பயணம் மேற்கொண்டார். சாலையின் இரு மருங்கிலும் திரண்டிருந்த ஏராளமான பொதுமக்கள் அவரை வரவேற்றனர். ஆங்காங்கே கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. சபர்மதி ஆசிரமத்தை வந்தடைந்த ட்ரம்ப் தம்பதிக்கு, அவர்களுக்கு முன்னதாகவே அங்கு வந்திருந்த பிரதமர் மோடி கைத்தறி துண்டு அணிவித்து வரவேற்றார்.

அதன் பின்னர் அமெரிக்க அதிபர் ட்ரம்பையும், மெலானியாவையும் ஆசிரமத்துக்குள் அழைத்துச் சென்ற பிரதமர் மோடி, மாகாத்மா காந்தியடிகள் வாழ்ந்த இடத்தின் சிறப்புகளை எடுத்துரைத்தார். அங்கிருந்த காந்தியின் உருவப்படத்தில் கைத்தறி நூலால் ஆன மாலையை பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபரும் சேர்ந்து அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். 

Trending News