7th Pay Commission: ஊழியர்களின் ஊதிய உயர்வு நிச்சயம், விரைவில் அறிவிப்பு

7th Pay Commission: ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகமானால், அதனால் அரசு ஊழியர்களின் சம்பளமும் மீண்டும் உயரும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 16, 2022, 10:24 AM IST
  • ஊழியர்களின் ஃபிட்மென்ட் ஃபாக்டர் விரைவில் அதிகரிக்கும்.
  • இந்த மாதம் இது குறித்து அறிவிக்கப்படலாம்.
  • ஃபிட்மெண்ட் ஃபாக்டரை 3 மடங்கு அதிகரிக்க வலியுறுத்தல்.
7th Pay Commission: ஊழியர்களின் ஊதிய உயர்வு நிச்சயம், விரைவில் அறிவிப்பு title=

7வது ஊதியக்குழு சமீபத்திய செய்திகள்: அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி. முதலில் அகவிலைப்படி, பிறகு வீட்டு வாடகை கொடுப்பனவு, பயணப்படி மற்றும் பதவி உயர்வு ஆகியவை கிடைக்கப்பெற்ற பிறகு, தற்போது ஃபிட்மென்ட் ஃபாக்டரும் அதிகரிக்கப்படும் என தெரியவந்துள்ளது.

ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகமானால், அதனால் அரசு ஊழியர்களின் சம்பளமும் மீண்டும் உயரும். பல ஊடக அறிக்கைகளின்படி, ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரிக்கப்படும் என்று தெளிவாகத் தெரிகிறது. இதனால் ஊழியர்களின் சமபளத்தில் மீண்டும் ஒரு பம்பர் உயர்வு காத்திருக்கிறது. 

அரசு பரிசீலித்து வருகிறது

மத்திய, மாநில அரசு ஊழியர்களின் ஃபிட்மென்ட் பேக்டரை 2.57 சதவீதத்தில் இருந்து 3.68 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. மார்ச் மாத சம்பளத்தில் உயர்த்தப்பட்ட ஃபிட்மென்ட் காரணி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குப் பிறகு, ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளமும் உயரும்.

ஊதியம் எவ்வளவு அதிகரிக்கும்

ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரிப்பால், ஊழியர்களின் சம்பளத்தில் பம்பர் உயர்வு இருக்கும். ஃபிட்மெண்ட் ஃபாக்டரில் ஏற்படும் அதிகரிப்பு குறைந்தபட்ச ஊதியத்தையும் அதிகரிக்கச் செய்யும். தற்போது, ​​பணியாளர்கள் 2.57 சதவீத ஃபிட்மென்ட் ஃபாக்டரின் அடிப்படையில் சம்பளம் பெறுகின்றனர். இப்போது அதை 3.68 சதவீதமாக உயர்த்த பரிசீலிக்கப்படுகிறது. அப்படி நடந்தால், ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 8 ஆயிரம் ரூபாய் உயர்த்தப்படும். அதாவது இதுவரை கிடைத்து வந்த ரூ. 18,000 ஊதியம் ரூ. 26,000 ஆக உயரும்.

மேலும் படிக்க | 7வது சம்பள கமிஷன்: இந்த மாநில ஊழியர்களுக்கு பம்பர், 3% டிஏ உயர்வு 

ஃபிட்மெண்ட் ஃபாக்டரை 3 மடங்கு அதிகரிக்க வலியுறுத்தல்

7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த அரசாங்கம் விரும்புகிறது. ஆனால் 7வது ஊதியக்குழுவின் கீழ் குறைந்தபட்ச சம்பளத்தை உயர்த்துவதற்கு அரசு ஆதரவாக இல்லை. அரசாங்கம் ஃபிட்மென்ட் ஃபாக்டரை 3 மடங்கு அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகின்றது. 

ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அதிகரிப்பால், ஊழியர்களின் அடிப்படை ஊதியம் ரூ.18,000ல் இருந்து ரூ.21,000 ஆக உயரும். அமைச்சரவை செயலாளருடனான ஊழியர் சங்க உறுப்பினர் நடத்திய கூட்டத்திலும் இது உறுதியளிக்கப்பட்டது. அரசாங்கம் இப்போது ஃபிட்மெண்ட் ஃபாக்டர் மீது அதிக கவனம் செலுத்தி வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் படிக்க | 7th Pay Commission: டிஏ அரியர் பற்றிய முக்கிய செய்தி, ஊழியர்களின் கோரிக்கை நிறைவேறுமா? 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News