Economic Survey : பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய அரசு ஏன் தாக்கல் செய்யவில்லை?

Central government's Economic Survey : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கும் நிலையில் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்யவில்லை. இதுகுறித்து எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.     

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 1, 2024, 03:11 PM IST
  • மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல்
  • பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யவில்லை
  • ஏன் தாக்கல் செய்யவில்லை என எதிர்க்கட்சிகள் கேள்வி
Economic Survey : பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய அரசு ஏன் தாக்கல் செய்யவில்லை? title=

Central government's Economic Survey News in Tamil : பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் நிதி அமைச்சகம் பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்டு வந்தது. இந்த அறிக்கையில் நாட்டின் பொருளாதார நிலை, வளர்ச்சி, பணவீக்கம் போன்ற பல்வேறு தகவல்கள் இடம்பெறும். இது வரும் நிதி ஆண்டிற்கான பொருளாதார திசையையும் வகுத்துக்காட்டும் முக்கிய ஆவணமாகும். ஆனால், இந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாலும், தேர்தல் நெருங்கி வருவதாலும் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. இதற்கு பதிலாக "இந்திய பொருளாதாரத்தின் 10 ஆண்டு மதிப்பீடு" என்ற அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Budget 2024: கடந்த பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள் என்ன என்ன தெரியுமா?

இந்த அறிக்கை கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை மதிப்பீடு செய்கிறது. மேலும், எதிர்காலத்தில் எதிர்பார்க்கப்படும் பொருளாதார வளர்ச்சி பற்றிய கணிப்புகளையும் அளிக்கிறது. அறிக்கையின்படி, அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தற்போது இது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது. மேலும், 2030ம் ஆண்டுக்குள் இந்தியா $7 டிரில்லியன் பொருளாதாரமாக மாற வாய்ப்புள்ளது என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.

பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படாதது குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. சிலர் இது தேர்தல் நெருங்கி வருவதால் எடுக்கப்பட்ட முடிவு என்றும், வேறு சிலர் இது பொருளாதாரத்தின் துல்லியமான தகவல்களை வெளியிட தாமதம் தேவை என்பதற்கான அறிகுறி என்றும் கருத்து தெரிவிக்கின்றனர். எது எப்படியிருந்தாலும், "இந்திய பொருளாதாரத்தின் 10 ஆண்டு மதிப்பீடு" அறிக்கை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைப் பற்றிய முக்கியமான தகவல்களை வழங்குகிறது. 

இந்த தகவல்கள் எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதார திசையை தெரிவிப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அதேநேரத்தில் எதிர்கட்சிகள் பொருளாதார ஆய்வறிக்கை குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளனர். பொருளாதார ஆய்வறிக்கை வெளியானால் பிரதமர் மோடியின் நிர்வாகம் குறித்து மக்கள் தெரிந்து கொள்வார்கள் என்பதால் வேண்டுமென்றே மத்திய அரசு மூடி மறைப்பதாக குற்றம்சாட்டியுள்ளன. வளர்ச்சி என கூறிய பாஜக, தங்களின் 10 ஆண்டுகால ஆட்சியில் உருவாக்கிய வளர்ச்சி என்ன? என்று மக்கள் கேட்டுவிடக்கூடாது என்பதற்காக இப்போது அது குறித்து பேசுவதையே நிறுத்திவிட்டனர்  என்றும் விமர்சித்துள்ளனர். 

மேலும் படிக்க | Budget 2024: நாளை பட்ஜெட் தாக்கல், இன்றே அரசின் பரிசு.. குறைகிறது மொபைல் போன்கள் விலை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News