செல்பி மோகத்தால் ஆற்று நீரில் மூழ்கி 7 வாலிபர்கள் பலி

Last Updated : Jun 23, 2016, 05:22 PM IST
செல்பி மோகத்தால் ஆற்று நீரில் மூழ்கி 7 வாலிபர்கள் பலி title=

உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூரை அடுத்த கரனல்கஞ்ச பகுதியில் ஏழு வாலிபர்கள் கங்கை ஆற்று குளிக்கச் சென்றனர். இதில் சிவம் என்ற இளைஞர் செல்பி எடுக்க முயற்சித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கினார். அவரை காப்பாற்ற மக்சூத் என்ற வாலிபர்  ஆற்றில் குதித்துள்ளார். ஆனால் அவரும் நீரில் மூழ்கியதால், தொடர்ந்து அவரது நண்பர்கள் ஐந்து பேரும் ஆற்றில் குதித்தனர்.

இந்நிலையில் ஏழு வாலிபர்களும் ஒருவர் பின் ஒருவராக  நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து அருகிலிருந்த நீச்சல் வீரர்கள் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு, அவர்களின் உடலை மீட்டனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையில் உயிரிழந்த வாலிபர்கள் சச்சின்  சத்யம் ( 22) குப்தா(21), போலு திவாரி(20), ரோஹித்(20), ஷிவம்(19), மக்சூத் அகமத் (31), போலா(16), சத்யம்(24) என்பது தெரியவந்தது.

செல்பி எடுக்கும் முயற்சியில் ஏழு வாலிபர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Trending News