பி.எஸ்.எல்.வி. - சி 35 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது!

Last Updated : Sep 26, 2016, 01:45 PM IST
பி.எஸ்.எல்.வி. - சி 35 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது! title=

இன்று பி.எஸ்.எல்.வி. - சி 35 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வானிலை நிலவரத்தை முன்கூட்டியே அறியக்கூடிய, அதிநவீன, 'ஸ்கேட் சாட் 1' செயற்கை கோளுடன் இன்று காலை 'பி.எஸ்.எல்.வி., - சி 35' ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. 

இதற்கான, 48.30 மணி நேரம் கவுன்ட்-டவுண்' நேற்று துவங்கியது. வானிலை மாற்றம், புயல் சின்னம் போன்றவற்றை முன்கூட்டியே அறியக்கூடிய, 'ஸ்கேட் சாட் 1' செயற்கை கோளுடன், அமெரிக்கா, அல்ஜீரியா, கனடா உள்ளிட்ட நாடுகளின், எட்டு செயற்கை கோள்களும், இன்று விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைகோள்கள் அடுத்த 5 ஆண்டுகள் சூரியனின் ஒளிவட்டபாதையில் பயணித்து தனது பணியை மேற்கொள்ளும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவியதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Trending News