பூஜா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டது

பூஜா எக்ஸ்பிரஸ் ரயிலின் மூன்று பெட்டிகளும் தடம் புரண்டது. அசம்பாவிதம் எதுவும் இல்லை.

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 4, 2018, 05:36 PM IST
பூஜா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டது title=

ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று மாலை 3:45 மணி அளவில் பூஜா எக்ஸ்பிரஸ் ரயிலின் மூன்று பெட்டிகளும் தடம் புரண்டது. இச்சம்பவம் புலேரா என்ற பகுதியில் நடந்துள்ளது. அசம்பாவிதம் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. தடம் புரண்ட பெட்டிகள் மறுசீரமைக்கும் பணியை இரயில்வே துறை செய்து வருகிறது. பணிகள் முடிந்ததும் இரயில் இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். 

 

 

பூஜா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ராஜஸ்தான் மாநில அஜ்மீர் ரயில் நிலையத்தில் இருந்து ஜம்மு-காஷ்மீர் மாநில ஜம்மு தாவி ரயில் நிலையம் செல்கிறது. 

Trending News