Hate Speech: வெறுப்புபேச்சால் இந்துக்களை அவமதிக்கும் ஒவைசி! உச்ச நீதிமன்றத்தில் PIL

இந்துக்களுக்கு எதிரான ஆட்சேபகரமான கருத்துகளுக்காக ஓவைசி மீது உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 23, 2022, 10:53 AM IST
  • வெறுப்புபேச்சை தொடரும் ஓவைசி
  • இந்துக்களை அவமதிக்கும் ஒவைசி மீது நடவடிக்கை தேவை
  • உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்
Hate Speech: வெறுப்புபேச்சால் இந்துக்களை அவமதிக்கும் ஒவைசி! உச்ச நீதிமன்றத்தில் PIL  title=

புதுடெல்லி: சமீபத்தில் ஹரித்வாரில் தர்ம சன்சத் தொடர்பான வெறுப்புப் பேச்சு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையீட வேண்டும் என்று மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீதிக்கான இந்து முன்னணி மற்றும் அதன் தலைவர் உட்பட பலர் இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.   

முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகளை விசாரிக்க உச்சநீதிமன்றம் சம்மதித்துள்ளதால், அக்பருதீன் ஒவைசி (Akbaruddin Owaisi), டெல்லியின் ஆம் ஆத்மி தலைவர் அமனத்துல்லா கான் போன்ற தலைவர்கள் இந்துக்களுக்கு எதிராக வெறுப்புப் பேச்சுக்களை நடத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

மனுவில் கோரிக்கை 
இந்து சமூகத்தை சேர்ந்தவர்கள், அவர்களின் தெய்வங்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வெறுப்பு பேச்சுகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர்கள் நீதிமன்றத்திடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.  

அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும், இந்தியாவின் (India the Secular nation) ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிராகவும் வெளியிடப்பட்ட ஆட்சேபகரமான கருத்துகள் குறித்து விசாரணை நடத்துமாறு இந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ALSO READ | நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மின் ஒளி சிலை! திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

இந்தியாவுக்கு எதிராக கருத்து தெரிவித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
இந்திய இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் எதிராக (India the Secular nation), இந்து மதத்துக்கு எதிராக, முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த சில தலைவர்கள் மற்றும் பிரச்சாரகர்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளது.
 
முஸ்லிம் லீக்கை நினைவுபடுத்தும் வெறுப்பு பேச்சு!
முஸ்லிம் தலைவர்களின் ஆத்திரமூட்டும் பேச்சுகளால் இந்து சமூகத்தில் அச்சம் மற்றும் அமைதியின்மை சூழல் உருவாகியுள்ளது.

இதுபோன்ற கருத்துகள், நாடு பிரிவினைக்கு வழிவகுத்த முஸ்லிம் லீக்கின் செயல்பாட்டை நமக்கு நினைவூட்டுகின்றன என்று வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் தாக்கல் செய்த இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹரித்வாரில் நடைபெற்ற தர்ம சன்சத் மாநாட்டிலும், டெல்லியில் நடைபெற்ற மற்றொரு நிகழ்ச்சியிலும் உரை நிகழ்த்தியவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கக் கோரி, பொதுநல மனுவை எதிர்த்து இந்து சேனாவின் தேசியத் தலைவர் மற்றொரு மனுவை தாக்கல் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ALSO READ | வரும் காலங்களில் வாகனங்களின் விலை குறையுமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News