நீட் தேர்வு முடிவுகள் இன்றே வெளியிடப்படும்: சிபிஎஸ்இ

13 லட்சம் பேர் எழுதிய நீட் தேர்வு முடிவுகள் இன்றே வெளியிடப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

Last Updated : Jun 4, 2018, 10:39 AM IST
நீட் தேர்வு முடிவுகள் இன்றே வெளியிடப்படும்: சிபிஎஸ்இ title=

நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கைக்காக நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 2018-19-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வை (நீட்) CBSE நடத்தியது.

தமிழ் நாட்டு மாணவர்களுக்கு தமிழ்நாட்டை தவிர வெளி மாநிலங்களிலும் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இதனால் மாணவ-மாணவிகளும், பெற்றோரும் கடும் அதிருப்தி அடைந்தனர். பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் எம்.பி.பி. எஸ்., பிடிஎஸ், இயற்கை மருத்துவம் போன்றவற்றுக்கான நீட் தேர்வுகள் கடந்த மே 6-ம் தேதி நடந்து முடிந்தது.

மே 6-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வுக்கான விடைகள் பட்டியல் சிபிஎஸ்இ இணையதளத்தில் கடந்த 25ம் தேதி வெளியிடப்பட்டன. தமிழகத்தில் இருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இத்தேர்வை எழுதியுள்ளனர். 

இந்நிலையில் முன்னதாக நீட் தேர்வுக்கான முடிவுகள் நாளை அறிவிக்கப்பட்டபடும் தெரிவித்திருந்த நிலையில் தற்போது நீர் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.  மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை cbseneet.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

 

 

 

Trending News