மோட்டார் வாகன திருத்த மசோதா 2019 நிறைவேற்றம்: அபராதங்களின் பட்டியல்!

மாநிலங்களவையில் 2019 மோட்டார் வாகன திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது; அபராதங்களின் முழுமையான பட்டியலைப் தெரிந்து கொள்ளுங்கள்!!

Last Updated : Aug 1, 2019, 11:20 AM IST
மோட்டார் வாகன திருத்த மசோதா 2019 நிறைவேற்றம்: அபராதங்களின் பட்டியல்! title=

மாநிலங்களவையில் 2019 மோட்டார் வாகன திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது; அபராதங்களின் முழுமையான பட்டியலைப் தெரிந்து கொள்ளுங்கள்!!

சாலை பாதுகாப்பை மேம்படுத்துதல், போக்குவரத்து துறைகளுடனான நடவடிக்கைகளில் குடிமக்களுக்கு வசதி செய்தல், கிராமப்புற போக்குவரத்து, பொது போக்குவரத்து மற்றும் ஆட்டோமேஷன், கணினிமயமாக்கல் மற்றும் ஆன்லைன் சேவைகள் மூலம் கடைசி மைல் இணைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட 2019 ஆம் ஆண்டு மோட்டார் வாகனங்கள் (திருத்த) மசோதாவை மாநிலங்களவை அனுமதித்துள்ளது.

சாலை பாதுகாப்பு விஷயத்தில், போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிராக செயல்பட அபராதங்களை அதிகரிக்க இந்த மசோதா முன்மொழிகிறது. சிறார் வாகனம் ஓட்டுதல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், ஆபத்தான வாகனம் ஓட்டுதல், அதிக வேகம், அதிக சுமை போன்ற குற்றங்கள் தொடர்பாக கடுமையான விதிமுறைகள் முன்மொழியப்படுகின்றன. மீறல்களை மின்னணு முறையில் கண்டறிவதற்கான ஏற்பாடுகளுடன் ஹெல்மெட் குறித்த கடுமையான ஏற்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மோட்டார் வாகனங்கள் தொடர்பான அபராதம் ஒவ்வொரு ஆண்டும் 10% அதிகரிக்கப்பட வேண்டும்.

புதிய மோட்டார் வாகன திருத்த மசோதா 2019 போக்குவரத்து விதி அபராதங்களை திருத்தியுள்ளது. மோட்டார் வாகனங்கள் (திருத்தம்) மசோதா - 2019 இன் கீழ் பல்வேறு அபராதங்களில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது. 

மோட்டார் வாகனச் சட்டத்தின் புதிய விதியின் படி, சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டினால், இதற்கு முன்பு 100 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. இந்த மசோதா நிறைவேறினால், அபராதமானது ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்படும். தலைக்கவசம் அணியாவிட்டால் முன்பு 100 ரூபாயாக இருந்த அபராதம், ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்படுவதுடன், 3 மாதத்திற்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும். ஆம்புலன்ஸ் போன்ற அவசர ஊர்திகளுக்கு வழிவிடவில்லை என்றால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும்.

ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கவில்லை என்றால், 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இந்த விதிமீறலுக்கு தற்போது 500 ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டதை மீறி வாகனம் ஓட்டுவோருக்கான அபராதத் தொகை 500-ரில் இருந்து பத்தாயிரம் ரூபாய் அதிகரித்து வசூலிக்கப்படும். மது குடித்து வாகனம் ஓட்டினால் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வரும் நிலையில், அந்தத் தொகை பத்தாயிரம் ரூபாயாக உயர்த்தப்படும். வேகமாக வாகனத்தை ஓட்டுதல், பந்தயத்தில் ஈடுபடுதல் போன்ற விதிமீறல்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்க இந்த மசோதா வழிவகை செய்யும்.

அதிக அளவும் பாரம் ஏற்றினால் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, டன்னுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம் வசூலிக்கப்படும். சிறுவர்கள் வாகனம் ஓட்டி, விதிமீறலில் ஈடுபட்டு விபத்து ஏற்பட்டால், பெற்றோர் அல்லது வாகன உரிமையாளர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, 3 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்படும். வாகனப் பதிவு ரத்து செய்யப்படும். இவை மட்டுமல்லாமல், விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச் செல்லும் நபர்களால் பாதிக்கப்படுவோருக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும். மோசமான சாலைகளால் விபத்து ஏற்பட்டால், ஒப்பந்ததாரருக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது.

உரிம நிபந்தனைகளை மீறும் கால் டாக்சி நிறுவனங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்படும் போன்ற திருத்தங்கள் அந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளன.

 

Trending News