மன்னிக்க கற்றுக் கொடுத்தவர் என் தந்தை ராஜீவ் -ராகுல் உருக்கம்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75-வது பிறந்தநாளையொட்டி, அவரை நினைவுக் கூறும் வகையில் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை இட்டுள்ளார்!

Last Updated : Aug 20, 2019, 01:14 PM IST
மன்னிக்க கற்றுக் கொடுத்தவர் என் தந்தை ராஜீவ் -ராகுல் உருக்கம்! title=

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75-வது பிறந்தநாளையொட்டி, அவரை நினைவுக் கூறும் வகையில் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை இட்டுள்ளார்!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75-வது பிறந்தநாளான இன்று, காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா, ராபர்ட் வேத்ரா,  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்திற்குச் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

இந்நிலையில், ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில்., ‘இன்று நாம் ராஜீவ் காந்தியின் 75-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறோம். தேசப்பற்று மிக்கவரான ராஜீவ் காந்தி தனது தொலைநோக்கு பார்வையாலும், கொள்கைகளாலும் இந்தியாவை கட்டமைக்க உதவியவர்.

எனக்கு எப்போதும் அன்பான தந்தையாக இருந்தவர், யார் மீதும் வெறுப்புணர்வை காட்டாமல், மன்னிப்பு வழங்கவும், அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்தவும் கற்றுக்கொடுத்தவர் அவர்தான்’ என உருக்கமாக பதிவிட்டுள்ளார். முன்னதாக இந்தியாவுக்கான ராஜீவ் காந்தியின் திட்டங்கள், செயல்பாடுகள் குறித்த சாதனை வீடியோ தொகுப்பு ஒன்றினை அவர் வெளியிட்டு இருந்தார்.

இந்த வீடியோ பதிவில் ‘இந்தியா முழுவதும் இந்த வாரம் ராஜீவ் காந்தியின் 75-வது பிறந்தநாள் விழாவினை கொண்டாட உள்ளோம். இந்த வாரத்தில் ஒவ்வொரு நாளும் ராஜீவ் காந்தியின் துறைச் சார்ந்த சாதனையை எடுத்துரைக்க உள்ளேன். முதலாவதாக தொழில்நுட்பத்தில் அவரது புரட்சி’ என குறிப்பிட்டிருந்தார். 

Trending News