ஜாக்பாட்! மூத்த குடிமக்களுக்கு ரயில்வே அளித்த மாஸ் தகவல், விரைவில் இந்த வசதி

Indian Railway Train Ticket Concession: ரயிலில் பயணிக்கும் மூத்த குடிமக்களுக்கு ரயில்வே மூலம் வழங்கப்படும் விலக்கு மீண்டும் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 16, 2023, 08:12 AM IST
  • மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட சீனியர் சிட்டிசன் சலுகை
  • ரயிலில் மூத்த குடிமக்களுக்கு பயண சலுகை
  • மூத்த குடிமக்கள் சலுகைகள்
ஜாக்பாட்! மூத்த குடிமக்களுக்கு ரயில்வே அளித்த மாஸ் தகவல், விரைவில் இந்த வசதி title=

மூத்த குடிமக்களுக்கு இந்திய ரயில்வே ரயில் டிக்கெட் சலுகை: ரயில்வேயில் பயணம் செய்யும் மூத்த குடிமக்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. ரயில் டிக்கெட்டில் மூத்த குடிமக்களுக்கு அளிக்கப்பட்ட விலக்கு மீண்டும் ஒருமுறை தொங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக நாடாளுமன்றக் குழு அரசிடம் வலியுறுத்தியுள்ளது. மூத்த குடிமக்களுக்கு ரயில்களில் பயணம் செய்யும் போது வழங்கப்படும் சலுகையை மீண்டும் வழங்குவது குறித்து ரயில்வே அமைச்சகம் அனுதாபத்துடன் பரிசீலிக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா எம்பி ராதா மோகன் சிங் தலைமையிலான ரயில்வே அமைச்சகத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு வலியுறுத்தியுள்ளது.

ஸ்லீப்பர் கிளாஸ் மற்றும் 3ஏ பிரிவில் உள்ள மூத்த குடிமக்களுக்கு ரயில்வே அமைச்சகம் மீண்டும் தளர்வு அளிக்கத் தொடங்க வேண்டும் என்று நாடாளுமன்றக் குழு, இரு அவைகளிலும் தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | என்ன ராசிப்பா இவரு... 2 மனைவிகளுடன் டைம் டேபிள் போட்டு குடும்பம் நடத்தும் நபர்!

மூத்த குடிமக்களுக்கு எவ்வளவு தள்ளுபடி வழங்கப்பட்டது?
அறிக்கையின்படி, இந்திய ரயில்வே 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய ஆண்களுக்கு 40 சதவீத கட்டணச் சலுகையை வழங்கியது, மறுபுறம் பெண்களுக்கு குறைந்தபட்ச வயது 58 ஆக இருக்கும் போது 50 சதவீத தளர்வு அளிக்கப்பட்டது என்று ரயில்வே குழு குறிப்பிட்டது. இந்த சலுகை மெயில்/ எக்ஸ்பிரஸ்/ ராஜ்தானி/ சதாப்தி/ துரந்தோ போன்ற வகுப்புகளுக்கும் வழங்கப்பட்டது.

'மூத்த குடிமக்கள் சலுகை நிறுத்தம்' என்ற முயற்சியை அமைச்சகம் தொடங்கியுள்ளது மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க விரும்பும் மூத்த குடிமக்கள் தள்ளுபடியின்றி டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்று மூத்த குடிமக்களுக்கு விருப்பம் அளித்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அறிக்கைகளின்படி, COVID-19 தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்த மூத்த குடிமக்களுக்கான விலக்கு விருப்பம் 20 மார்ச் 2020 அன்று நிறுத்தப்பட்டது.

மூத்த குடிமக்கள் மீண்டும் விலக்கு பெறலாம்
கொரோனா தொற்றுநோய்களின் போது, ​​மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணத்தில் சலுகை வழங்கும் வசதி நீக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இப்போது கோவிட் நெறிமுறைகள் முடிந்துவிட்டன. ரயில்கள் தனது வழக்கமான வேகத்திற்கு திரும்பியுள்ளது. எனவே ஸ்லீப்பர் கிளாஸ் மற்றும் 3 ஏ பிரிவில் உள்ள மூத்த குடிமக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள விலக்குகளை அனுதாபத்துடன் பரிசீலித்து அதை மீண்டும் தொடங்க அமைச்சகத்தை வலியுறுத்துவதாக குழு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | மருத்துவக் காப்பீடு குறித்து மிகப்பெரிய அப்டேட், உடனே இந்த செய்தியை படுயுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News