ஒரே நாளில் 94 கொரோனா தொற்றுகளை பதிவு செய்த இந்தூர்...

மத்தியபிரதேசத்தின் இந்தூரில் ஒரே நாளில் 94 கொரோனா தொற்று பதிவான நிலையில் மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,471-ஆக அதிகரித்துள்ளது.

Last Updated : Apr 29, 2020, 09:37 AM IST
ஒரே நாளில் 94 கொரோனா தொற்றுகளை பதிவு செய்த இந்தூர்... title=

மத்தியபிரதேசத்தின் இந்தூரில் ஒரே நாளில் 94 கொரோனா தொற்று பதிவான நிலையில் மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,471-ஆக அதிகரித்துள்ளது.

மேலும் COVID-19 தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 122-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒன்பது பேர் இறந்துள்ளனர். இவற்றில் உஜ்ஜைனில் மூன்று, இந்தூரில் இரண்டு மற்றும் போபால், ரைசன், தேவாஸ் மற்றும் அசோக்நகர் ஆகியவற்றில் தலா ஒரு இறப்பு பதிவாகியுள்ளது.

இந்தூரில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் இதுவரை 65 இறப்புகள் பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் உஜ்ஜைனில் 20, போபாலில் 13, தேவாஸில் ஏழு, கார்கோனில் ஆறு, ஹோஷங்காபாத் மற்றும் மாண்ட்சௌரில் தலா இரண்டு இறப்புகள் பதிவாகியுள்ளன. சிந்த்வாரா, ஜபல்பூர், அகர் மால்வா, தார், ரைசன், அசோக்நகர் மற்றும் காண்ட்வா தலா 1 இறப்பைப் பதிவு செய்துள்ளன.

மாநிலத்தின் நான்கு மாவட்டங்களான புர்ஹான்பூர், அசோக்நகர், ஷாஹ்தோல் மற்றும் ரேவா ஆகியவை செவ்வாய்க்கிழமை மாநிலத்தின் 52 மாவட்டங்களில் 31-க்கு வைரஸ் பரவிய முதல் வழக்குகளை பதிவு செய்தன.

போபால் 30 புதிய வழக்குகளைத் தொடர்ந்து, ரைசனில் 12, தார் மற்றும் உஜ்ஜைனில் தலா நான்கு, ஷாஹ்தோல் மற்றும் ரேவாவில் தலா இரண்டு, புர்ஹான்பூர், அசோக்நகர், ஜபல்பூர் மற்றும் ஹோஷங்காபாத் ஆகிய இடங்களில் தலா ஒரு வழக்குகள் பதிவாகியுள்ளன. 1,466 வழக்குகள் உள்ள இந்தூர் மாநிலத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. போபால் 458 தொற்றுகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News