சினிமா பானியில், மணப்பெண்னை தூக்கிச் சென்ற காதலன்!

அங்கு கூடி இருந்தவர்களுக் ஒன்றும் புரியாத நிலையில், நடந்த நிகழ்வுகள் அனைத்தும் ஒரு சினிமாவை பார்ப்பதை போல் பிரம்மிப்பில் ஆழ்ந்துள்ளனர்.!

Last Updated : Dec 8, 2017, 02:01 PM IST
சினிமா பானியில், மணப்பெண்னை தூக்கிச் சென்ற காதலன்! title=

ஆந்திராவில், திருமணம் வேண்டாம் என, மணமகன் மற்றும் உறவினர் கண் முன்னே மணமகள் தன் காதலருடன் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!

சினிமாவில் நடப்பது போல நிகழ்ந்த இச்சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது. 

இத்திருமணம் கிருஸ்துவ முறைப்படி திட்டமிடப்பட்டுள்ளது, திருமணத்தின் அனைத்து சடங்குகள் காலையிலிருந்து நன்றாகப் சென்றுள்ளது.

திருமணத்தின் போது பாதரியார் மணமகனிடம் திருமண விருப்பத்தினை ஒப்புக்கொண்டார். பின்னர் மணமகளிடம் கேட்கும் போது அவர் தனக்கு விருப்பமில்லை என தெரிவித்ததுடன் அருகில் இருந்த அவரது காதலருடன் ஓட்டம் பிடித்தார்.

அங்கு கூடி இருந்தவர்களுக் ஒன்றும் புரியாத நிலையில், நடந்த நிகழ்வுகள் அனைத்தும் ஒரு சினிமாவை பார்ப்பதை போல் பிரம்மிப்பில் ஆழ்ந்துள்ளனர்.

Trending News