பெற்றோரை கோடாரியால் வெட்டி கொன்ற ஹரியானா வாலிபர்!

ஹரியானா மாநிலம் சாருவுனி கிராமத்தை சேர்ந்த 24-வயது வாலிபர் தன் பெற்றோர்களை கோடாரியால் வெட்டிக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!

Last Updated : Jun 22, 2018, 01:25 PM IST
பெற்றோரை கோடாரியால் வெட்டி கொன்ற ஹரியானா வாலிபர்! title=

ஹரியானா மாநிலம் சாருவுனி கிராமத்தை சேர்ந்த 24-வயது வாலிபர் தன் பெற்றோர்களை கோடாரியால் வெட்டிக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!

ஹரியானாவின் குருசேக்த்ரா பகுதியை சேர்ந்தவர் விஷால். இவரது பெற்றோர்கள் ஷியோராம்(55), சோனா தேவி(42). நேற்று மாலை சுமார் 5 மணியளவில் தன் பெற்றோர்கள் இருவரையும் கோடாரியால் வெட்டிக் கொன்றுள்ளார் இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து குருசேக்த்ரா காவல் ஆணையர் ராஜேஷ் காய்லா தெரிவிக்கையில்... இச்சம்பவம் தொடர்பாக விஷால் கைது செய்யப்பட்டுள்ளார். எனினும் கொலைக்கான காரணம் தெரியவில்லை., முதற்கட்ட விசாரணையில் விஷால் குடிபோதைக்கு அடிமையானவர் என தெரியவந்துள்ளது. மேலும் அவர் தினமும் குடித்துவிட்டு தனது பெற்றோர்களை கொடுமை படுத்தி வந்ததாகவும் தெரிகிறது என தெரிவித்துள்ளார். சடலமாக மீட்கப்பட்ட பெற்றோர்களின் உடல்களை குருசேக்ரா சிவில் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட கிராமவாசி ஒருவர் இதுகுறித்து தெரிவிக்கையில், விஷாலின் மூத்த சகோதரியின் திருமணத்திற்கு பின்னர் இவர் மட்டுமே தன் பெற்றோருடன் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். தினமும் குடித்துவிட்டு வந்து பெற்றோரை துன்புருத்துவார் என தெரிவித்துள்ளார். மேலும் நேற்று மாலை திடீரென அவரது பெற்றோர்கள் இருவரும் பினமாக இருப்பதை கண்டு கிராமவாசிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து ஷாஷாபாத் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொன்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Trending News