பலத்த மழையால் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்து 4 பேர் பலி..

பலத்த மழையின் காரணமாக தரைமட்டான அக்கட்டடத்தின் இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கிதவிப்பு!!

Last Updated : Aug 10, 2019, 09:14 AM IST
பலத்த மழையால் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்து 4 பேர் பலி.. title=

பலத்த மழையின் காரணமாக தரைமட்டான அக்கட்டடத்தின் இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கிதவிப்பு!!

குஜராத்தின் கெடா மாவட்டத்தில் நதியாட்டின் பிரகதிநகரில் வெள்ளிக்கிழமை இரவு மூன்று மாடி அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.

குறைந்தது ஏழு முதல் எட்டு பேர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது. தற்போது மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. தகவல்அறிந்த தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 5 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் இடிபாடுகளை அகற்றி உள்ளே சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது.

இதை தொடர்ந்து, மீட்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட மாவட்ட ஆட்சியர் மற்றும் பிற அதிகாரிகள் சம்பவ இடத்தை வந்தடைந்தனர். இந்த விபத்தில் மேலும், உயிர் சேதம் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. 

 

Trending News