500 ரூபாய் செலவில் நடந்த திருமணம்

ரூபாய் நோட்டுக்கு தடையால் விருந்தினருக்கு வெறும் டீ மட்டும் கொடுத்து 500 ரூபாய் செலவில் திருமணம் நடைபெற்றது.

Last Updated : Nov 25, 2016, 12:17 PM IST
500 ரூபாய் செலவில் நடந்த திருமணம் title=

சூரத்: ரூபாய் நோட்டுக்கு தடையால் விருந்தினருக்கு வெறும் டீ மட்டும் கொடுத்து 500 ரூபாய் செலவில் திருமணம் நடைபெற்றது.

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு மத்திய அரசு தடை வித்தித்திருந்தது. 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று கடந்த 8-ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இதனால் நவம்பர் 9-ம் தேதி பிறகு நடைபெற இருந்த பல திருமணங்கள் தடைபட்டன. 

இந்தநிலையில் குஜராத் மாநிலம் சூரத்தில் ஒரு திருமணம் 500 ரூபாய் செலவில் மிக எளிமையாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் கலந்து கொள்ள வந்த விருந்தினர்களுக்கு டீ மற்றும் தண்ணீர் மட்டுமே வழங்கப்பட்டது.

பிரதமர் மோடியின் அறிவிப்பு அடுத்து நாங்கள் பிரம்மாண்டத்தை தவிர்த்து எளிமையாக திருமணத்தை நடத்த முடிவு செய்தோம். திருமணத்திற்கு வருகை தந்த விருந்தினர்களுக்கு தண்ணீர் மற்றும் டீ வழங்கினோம்" என்று மணமகள் கூறினார்.

Trending News