அடுத்த 2 நாட்களுக்கு 11 மாவட்டங்களில் சுட்டெரிக்கும் வெயில்: வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..!

Last Updated : May 23, 2020, 02:53 PM IST
அடுத்த 2 நாட்களுக்கு 11 மாவட்டங்களில் சுட்டெரிக்கும் வெயில்: வானிலை ஆய்வு மையம்! title=

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..!

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் லேசானது முதல் நிதானமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் சென்னை உள்பட 11 மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும். வெயில் 104 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டும் என்பதால் பகல் 11.00 மணி முதல் மதியம் 03.00 மணிவரை வெளியே செல்ல வேண்டாம். திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், மதுரை, திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும். 

தமிழகத்தில் வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்,சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, கரூர்,மதுரை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதிக பட்ச வெப்ப நிலையானது 40 - 42 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையை ஒட்டி இருக்கும். இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறனர்.

தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் காற்று 5 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்படியாக நீலகிரி மாவட்டத்தில் 7 சென்டி மீட்டர் மழையும், அதற்கு அடுத்த படியாக கன்னியாகுமரி மற்றும் சேலம் மாவட்டத்தில் 5 சென்டி மீட்டர் மழை பதிவாகியது. சென்னையை பொறுத்தவரை வானம் தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலையானது 40 டிகிரி செல்சியசும் குறைந்தபட்சமாக 30 டிகிரி செல்சியசும் இருக்கும்.

Trending News