Budget 2022: ஊழியர்களுக்கு கிடைக்குமா குட் நியூஸ்? ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அதிகரிக்கப்படுமா?

Budget 2022: இன்று பட்ஜெட்டில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரிப்பு பற்றி அறிவிக்கப்படக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரிப்புடன், மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியமும் உயரும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 1, 2022, 11:41 AM IST
  • இன்று பட்ஜெட்டில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரிப்பு பற்றி அறிவிக்கப்படக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
  • ஊழியர்களின் ஃபிட்மென்ட் பேக்டரை 2.57 சதவீதத்தில் இருந்து 3.68 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.
  • ஃபிட்மென்ட் ஃபாக்டரை அதிகரிப்பது குறைந்தபட்ச ஊதியத்தையும் அதிகரிக்கும்.
Budget 2022: ஊழியர்களுக்கு கிடைக்குமா குட் நியூஸ்? ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அதிகரிக்கப்படுமா? title=

Budget 2022/7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி கிடைக்கக்கூடும். அகவிலைப்படியில் அதிகரிப்பை பெற்ற பிறகு, ஊழியர்களுக்கு வீட்டு வாடகை கொடுப்பனவு, பயணப்படி, பதவி உயர்வு என பலவகை நல்ல செய்திகள் கிடைத்துக்கொண்டு இருக்கின்றன. 

இந்த நிலையில், மற்றொரு நல்ல செய்தி கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. இன்று பட்ஜெட்டில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரிப்பு பற்றி அறிவிக்கப்படக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரிப்புடன், மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியமும் உயரும்.

அரசு பரிசீலித்து வருகிறது

மத்திய, மாநில அரசு ஊழியர்களின் ஃபிட்மென்ட் பேக்டரை 2.57 சதவீதத்தில் இருந்து 3.68 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. இன்று தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில்  ஃபிட்மென்ட் ஃபாக்டர் பற்றி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குப் பிறகு, ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளமும் உயரும்.

ALSO READ | Union Budget 2022 Live: மத்திய பட்ஜெட் 2022 தாக்கல் தொடங்கியது

சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்?

 ஃபிட்மென்ட் ஃபாக்டர் அங்கீகரிக்கப்பட்டால், ஊழியர்களின் சம்பளத்தில் பம்பர் உயர்வு இருக்கும்.  ஃபிட்மென்ட் ஃபாக்டரை அதிகரிப்பது குறைந்தபட்ச ஊதியத்தையும் அதிகரிக்கும். தற்போது, ​​பணியாளர்கள் 2.57 சதவீதம் என்ற பிட்மென்ட் ஃபாக்டரின் கீழ் சம்பளம் பெறுகின்றனர். இப்போது அதை 3.68 சதவீதமாக உயர்த்த பரிசீலிக்கப்படுகிறது. அப்படி நடந்தால், ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 8 ஆயிரம் ரூபாய் உயர்த்தப்படும். அதாவது இதுவரை 18,000 ரூபாயாக இருந்த சம்பளம் ரூ. 26,000 ஆக உயரும்.

ஃபிட்மெண்ட் ஃபாக்டரை 3 மடங்கு அதிகரிக்க கோரிக்கை 

7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த அரசாங்கம் விரும்புகிறது, ஆனால் 7வது CPC இன் கீழ் குறைந்தபட்ச சம்பளத்தை உயர்த்துவதற்கு அரசு தயாராக இல்லை. அரசாங்கம் ஃபிட்மென்ட் ஃபாக்டரை 3 மடங்கு அதிகரிக்கக்குடும். ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரிப்பால், ஊழியர்களின் அடிப்படை ஊதியம் ரூ.18,000ல் இருந்து ரூ.21,000 ஆக உயரும். 

அமைச்சரவை செயலாளருடனான ஊழியர் சங்க கூட்டத்திலும் ஊழியர்களுக்கு நம்பிக்கையான செய்தி கிடைத்திருக்கிறது. மொத்தத்தில், மத்திய அரசு ஊழியர்களின் ஃபிட்மென்ட் ஃபாக்டரில் அதிக கவனம் செலுத்தி வருகின்றது என்பது தெளிவாகிறது. இது குறித்த பெரிய அறிவிப்பு இன்று பட்ஜெட்டிலோ அல்லது அதற்குப் பிறகோ கிடைக்கக்கூடும். 

ALSO READ | பட்ஜெட்டுக்கு முன் சூப்பர் அறிவிப்பு, LPG சிலிண்டர் விலையில் பெரிய மாற்றம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News