300 குருகுல கல்வி நிறுவனங்கள்- ஆர்.எஸ்.எஸ்

Last Updated : May 17, 2016, 05:36 PM IST
300 குருகுல கல்வி நிறுவனங்கள்- ஆர்.எஸ்.எஸ் title=

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு எப்போது ஆட்சியில் அமர்ந்ததோ அது முதல் சமஸ்கிருதத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் 300 குருகுல கல்வி நிறுவனங்களை நிறுவ ஆர்.எஸ்.எஸ். இயக்கம் முடிவு செய்துள்ளது. மேலும் இத்திட்டத்துக்கு முழு ஆதரவு தருவதாக மத்திய அரசு கூறியுள்ளது. இது பெரும் சர்ச்சையை உருவாக்கிள்ளது.

மேலும் இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி முழு ஆதரவு தருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆர்.எஸ்.எஸ். இயக்கம் பாஜகவின் தாய் அமைப்பு என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

Trending News