20 MLA-க்கள் தகுதி நீக்கம்: டெல்லி ஐகோர்ட்டில் முறையிட ஆம் ஆத்மி முடிவு!!

20 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டில் முறையிட முதல்-மந்திரி கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளது. 

Last Updated : Jan 22, 2018, 10:28 AM IST
20 MLA-க்கள் தகுதி நீக்கம்: டெல்லி ஐகோர்ட்டில் முறையிட ஆம் ஆத்மி முடிவு!! title=

20 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டில் முறையிட முதல்-மந்திரி கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளது.

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு, கடந்த ஆண்டு மார்ச் 13-ம் தேதி, 21 ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்களை சட்டப்பேரவை செயலாளர்களாக நியமித்தனர்.

"ஆதாயம் தரும் 2 பதவிகளில் எம்எல்ஏ-க்கள் இருப்பது அரசியலமைப்பு சட்டத்தை மீறிய செயல் என்றும், அதனால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் குடியரசு தலைவரிடம் புகார் அளித்தனர்.

இந்த புகார் கடிதமானது குடியரசு தலைவர் மாளிகையில் இருந்து தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து எம்எல்ஏ -க்களிடம் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தியது.

21 எம்எல்ஏக்களில் ஒருவர் தனது பதவியை ராஜினமா செய்தார், எனவே 20 எம்எல்ஏ-க்கள் மீதான விசாரணை தொடர்ந்தது. பின்னர் இந்த 20 எம்.எல்.ஏ களையும் தகுதி நீக்கம் செய்யலாம் என குடியரசு தலைவருக்கு தேர்தல் ஆனையம் பரிந்துரைத்தது.

இதையடுத்து, இந்த 20 எம்.எல்.ஏ-க்களை தகுதிநீக்கம் செய்வதற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்நிலையில், இந்த 20 எம்.எல்.ஏ.க்கள் பதவி இழந்ததை தொடர்ந்து, அவர்கள் உறுப்பினர்களாக இருந்த சட்டசபை தொகுதிகள் தற்போது காலியாக உள்ளன. எனவே, ஜனாதிபதியின் இந்த முடிவுக்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்ய ஆம் ஆத்மி கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.

Trending News