மசாலாக்களில் ரசாயன கலப்பு... புற்றுநோய் அபாயம் குறித்து FSSAI எச்சரிக்கை..!!

இந்திய மசாலாப் பொருட்கள் அவற்றின் சுவை, வாசனை மற்றும் சுவைக்காக உலகம் முழுவதும் பிரபலமானது. இவை உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 29, 2024, 06:19 PM IST
  • இரசாயன பூச்சிக்கொல்லிகள் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும்.
  • உடல் ஆரோக்கியத்திற்கு பெரும் கேடு விளைவிக்கக் கூடியவை.
  • புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது
மசாலாக்களில் ரசாயன கலப்பு... புற்றுநோய் அபாயம் குறித்து FSSAI எச்சரிக்கை..!! title=

இந்திய மசாலாப் பொருட்கள் அவற்றின் சுவை, வாசனை மற்றும் சுவைக்காக உலகம் முழுவதும் பிரபலமானது. இவை உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் சமீபத்தில் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் நான்கு இந்திய மசாலாப் பொருட்களில் புற்று நோயை அதிகரிக்கக் கூடிய ரசாயனங்கள் காணப்பட்டதால் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த எந்தெந்த மசாலாப் பொருட்கள் (Indian Spices), ரசாயன கலப்பு காரணமாக தடை செய்யப்பட்டுள்ளது, என்பதை அறிந்து கொள்வோம்.

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (Food Safety and Standards Authority of India - FSSAI) வெளியிட்டுள்ள அறிக்கையில்,  பல புகழ்பெற்ற நிறுவனங்களின் மசாலாப் பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உதாரணமாக, அசெட்டமிப்ரிட், தியாமெதோக்சம் மற்றும் இமிடாக்ளோபிரிட் ஆகிய இரசாயனங்கள் சில மசாலாப் பொருட்களில் காணப்படுகின்றன. இது தவிர, காய்கறிகள் மற்றும் மசாலாப் பொருட்களில் ட்ரைசைக்லசோல் மற்றும் புரோஃபெனோபாஸ் போன்ற இரசாயனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவை ஆரோக்கியத்திற்கு (Health Tips) மிகவும் தீங்கு விளைவிக்கும்.

இந்த இரசாயனங்கள் மிகவும் ஆபத்தானவை. உடல் ஆரோக்கியத்திற்கு பெரும் கேடு விளைவிக்கக் கூடியவை. அவற்றை தொடர்ந்து உபயோகித்து வந்தால் மூளை, கல்லீரல் மற்றும் பெண் இனப்பெருக்க உறுப்புகளில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

மேலும் படிக்க | இன்சுலினை சுரப்பை அதிகரித்து... எகிறும் சுகர் லெவலை குறைக்கும் நித்திய கல்யாணி..!

தயிர் பச்சடி தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மசாலாப் பொருட்களும் பாதுகாப்பற்றவை என கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்த அறிக்கையில், அசிடாமிப்ரிட், தியாமெதோக்சம், எதியோன் மற்றும் அசோக்ஸிஸ்ட்ரோபின் ஆகிய இரசாயனங்கள் சில வகை மசாலாக்களில் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த இரசாயன பூச்சிக்கொல்லிகள் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும்.

தியாமெதோக்சம் கல்லீரல் புற்றுநோயின் அபாயத்தை விரைவாக அதிகரிக்கச் செய்யும் என ஆய்வுகள் பல தெரிவிக்கின்றன. எனவே, இந்த மசாலாப் பொருட்களை முற்றிலும் தவிர்க்கவும் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | ஒரு மாதம் தினமும் இளநீர் குடித்து வந்தால்... மாற்றத்தை நீங்களே உணருவீர்கள்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News