நிறைய தாகம் எடுத்தால் மூளையில் கட்டி என்று அர்த்தமா..? பாதிக்கப்பட்டவரின் பகீர் கதை..!

Brain Tumor Symptoms: இங்கிலாந்தை சேர்ந்த ஒரு நபருக்கு சில நாட்களுக்கு முன்னர் மூளையில் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை கண்டுபிடிக்கும் முன் தனக்கு அதீத தாகம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.   

Written by - Yuvashree | Last Updated : Jul 19, 2023, 06:50 PM IST
  • அதிகம் தாகம் எடுத்தால் மூளையில் கட்டி உள்ளதாக அர்த்தமா..?
  • ஒருவருக்கு உண்மையாகவே இந்த பாதிப்பு இருந்துள்ளது.
  • முழு விவரம் இங்கே.
நிறைய தாகம் எடுத்தால் மூளையில் கட்டி என்று அர்த்தமா..? பாதிக்கப்பட்டவரின் பகீர் கதை..! title=

இங்கிலாந்தில் உள்ள கார்ன்வெல் எனும் மாகானத்தின் ஃபால் மவுத் என்ற இடத்தை சேர்ந்த நபர், ஜானத்தன் ப்ளம்மர். இவருக்கு 41 வயது ஆகிறது. இவர், சில நாட்களுக்கு முன்பு ‘அதீத தாக’ பிரச்சனையால் அவதிப்பட்டுள்ளார். தன்னால் சமாளிக்க முடியாத அளவிற்கு தாகம் ஏற்பட்டதால் இவர் மருத்துவர்களை அணுகியுள்ளார். 

அதீத தாகத்தால் பாதிக்கப்பட்ட நபர்-மருத்துவர்கள் கூறியது என்ன..?

நிறைய தாகம் எடுத்ததால் இது ஜானத்தனுக்கு பிரச்சனையாக உருமாறியது. இவரை பரிசோதித்த மருத்துவர்கள், முதலில் இவருக்கு சர்க்கரை நோய் இருக்கும் என்று கணித்தனர். ஆனால் இது குறித்து சர்க்கரை நோய் பரிசோதனை மேர்கொண்ட போது, அது நெகடிவ் என வந்தது. அதன் பிறகு தொடர்ந்து இவருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. இதில்தான் இவருக்கு மூளையில் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கட்டி, அதிக தாகத்தை ஏற்படுத்தும் பிட்யூட்டரி க்ளாண்ட் என்ற பகுதியில் இருந்ததும் மருத்துவர்களால் கண்டறியப்பட்டது. 

மேலும் படிக்க | உடல் எடையை குறைக்கனுமா? அப்போ இந்த நீரை தினமும் குடியுங்கள்

தாகத்தை தூண்டும் மூளையின் பகுதி:

பிட்யூட்டரி சுரப்பி (Pituitary gland) என்பது மூளையின் பட்டாணி அளவிற்கு சிறியதாக உள்ள பகுதியாகும், இது தாகத்தின் உணர்வைக் கட்டுப்படுத்த உதவுகிறது. உடலில் நீர் சத்து குறைவதை கண்டறிந்து நம்மை தண்ணீர் குடிக்கச் சொல்கிறது. ஜானத்தனின் விஷயத்தில் அவருக்கு அந்த பிட்யூட்டரி சுரப்பியில் கட்டி ஏற்பட்டதால் அவருக்கு தொடர்ந்து தாகம் ஏற்பட்டுக்கொண்டே இருந்தது. இதனால், அவர் ஒரு நாளைக்கு 10 லிட்டர் தண்ணீர் வரை குடித்தாராம். 

மிகவும் மோசமான நேரம்..

இது குறித்து ஒரு நேற்காணலில் பேசியுள்ள ஜானத்தன், தன்னால் தாகத்தை ஒரு கட்டத்திற்கு மேல் அடக்கவே முடியவில்லை என்றும், தான் எந்த அளவு தண்ணீர் குடித்தாலும் அது சிறுநீராக வெளியேறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த பிரச்சனையினால் அவர் செய்யும் வேலையில் பாதிப்பு ஏற்பட்டதாகவும் மிகவும் உடல் நிலை குன்றியது போல உணர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அது தனக்கு மிகவும் கடினமான நேரமாக இருந்ததாக அவர் கூறியுள்ளார். 

நோயை எப்படி கண்டறிந்தனர்..?

பல நோய் பாதிப்புகளாக இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகித்து எல்லா பரிசோதனைகளையும் மேற்கொண்டனர். ஆனால் இவருக்கு ஏற்பட்ட இந்த அதீத தாக பாதிப்பு வித்தியாசமானதாகவே பார்க்கப்பட்டது. பின்னர் கடைசியாக இவருக்கு தலையில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்யப்பட்டது. அந்த ஸ்கேனின் இவருக்கு மூளையில் சிறிய அளவில் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  உடலில் உள்ள அழுக்களால் இது போன்ற கட்டிகள் உருவாகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனந்ர். பொதுவாக இது போன்ற கட்டிகள் கருப்பைகளிலோ அல்லது பிறப்புருப்பிலோதான் வரும். அல்லது உடலில் உள்ள வேறு சில உறுப்புகளில் வரலாம். இவரை பொருத்தவரி மூளையில் வந்துள்ளது. 

சிகிச்சை மற்றும் பக்க விளைவுகள்:

மூளையில் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, ஜானத்தன் 30 முறை ரேடியோ தெரபி சிகிச்சையை மேற்கொண்டுள்ளார். இதனுடன் மருந்து மாத்திரைகளும் எடுத்துக்கொண்டுள்ளார். இதன் பக்க விளைவாக இவருக்கு உடல் எடை அதிகமாகி கிட்டத்தட்ட 114 கிலோ வரை உடல் எடை இருந்துள்ளது. 

குணமாகிவிட்டது..!

நல்ல செய்தி என்னவென்றால் இப்போது ஜானத்தனிற்கு மூளையில் கட்டி இல்லை. தொடர் சிகிச்சைகளுக்கு பிறகு இப்போது அவர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளார். ஆனாலும் இவரால் ரக்பி, கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் ஈடுபட முடியாமல் போயுள்ளது. சிகிச்சையின் பக்க விளைவாக கூடிய உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார், ஜானத்தன். அதற்காக நீச்சல் பயிற்சி மற்றும் நடைப்பயிற்சியை மேற்கொண்டு வருகிறாராம். இவரது நோய் பாதிப்பினை ஒரு எடுத்துக்காட்டாக எடுத்துக்கொண்டு இது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுமாறு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 

மேலும் படிக்க | தொப்பை கொழுப்பை உடனடியா குறைக்க... இந்த உணவுகளை சேர்த்து சாப்பிடுங்க: அசந்து போவீங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News