Corona Medicine!! 4 நாட்களில் COVID-19 நோயாளியை குணமடையச் செய்த அண்டை நாடு

60 நோயாளிகளும் நான்கு மருந்துகளின் கலவையுடன் நான்கு நாட்களின் கால இடைவெளியில் குணமடைந்துள்ளனர் என்று வங்கதேச மருத்துவர்கள் தெரிவித்தனர். இது அதிர்ச்சியூட்டும் வகையில் உள்ளது. மேலும் இது ஒரு நல்ல செய்தி.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 18, 2020, 10:29 PM IST
  • 60 நோயாளிகள் நான்கு மருந்துகளின் கலவையுடன் நான்கு நாட்களின் கால இடைவெளியில் குணமடைந்தனர்.
  • உலகம் முழுவதும் 3 லட்சத்துக்கும் அதிகமான உயிர்களை கொன்றுள்ளது மற்றும் 4.7 மில்லியன் மக்களை பாதித்துள்ளது.
  • கொரோனா வைரஸ் நோயின் கடுமையான அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளுக்கு மருந்துகளின் கலவை சிறந்த முடிவுகளைத் தந்தது.
Corona Medicine!! 4 நாட்களில் COVID-19 நோயாளியை குணமடையச் செய்த அண்டை நாடு title=

டாக்கா: கொரோனா வைரஸ் (Coronavirus) நாவல் தொடர்ந்து உலகெங்கிலும் பரவி வருவதால், மருத்துவ வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள், இந்த தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுவதற்கான சாத்தியமான மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை உருவாக்க முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. உலகத்தை அச்சுறுத்தி வரும் தொற்றுநோயான COVID 19-க்கு தீர்வைக் கண்டு பிடிப்பதற்காக உலகம் கைகோர்த்துள்ளதால், விரைவில் மருந்து சந்தைக்கு வருவதற்கான சாத்தியமான கூறுகள் உள்ளன. 

இந்த தொற்றுநோய் ஏற்கனவே உலகம் முழுவதும் 3 லட்சத்துக்கும் அதிகமான உயிர்களை கொன்றுள்ளது மற்றும் 4.7 மில்லியன் மக்களை பாதித்துள்ளது. COVID-19 தொற்று எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில், வங்களாதேஷ் மருத்துவக்குழு ஒரு நல்ல செய்தி பகிர்ந்து கொண்டுள்ளது. 

மேலும் படிக்க: தேசிய தலைநகரத்தில் பேருந்துகள், ஆட்டோக்கள், டாக்சிகள் கட்டுப்பாடுகளுடன் இயங்கும்

ஒரு மூத்த மருத்துவர் தலைமையிலான வங்களாதேஷ் குழு, கடுமையான நோய்வாய்ப்பட்ட COVID-19 நோயாளிகளுக்கு பயனுள்ள மருந்துகளின் கலவையுடன் சிகிச்சையளிப்பதில் வெற்றி முடிவுகளைக் கண்டறியப்பட்டதாக கூறியுள்ளது.

பயன்படுத்தப்படும் மருந்துகள்...
ஒரு செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, ஐவர்மெக்டின் எனப்படும் ஆன்டிபிரோடோசோல் மருந்தைப் பயன்படுத்துவதன் மூலம் ஏறக்குறைய ‘கொரொனாவை குணப்படுத்தூம்" முடிவுகள் வெளியாகின. இது ஒரு ஒட்டுண்ணி கொல்லும் மருந்து. டாக்ஸிசைக்ளின் மற்றும் ஒரு ஆண்டிபயாடிக் ஆகும். இந்த இரண்டு மருந்துகளின் கலவையும் கொரோனா வைரஸ் நோயின் கடுமையான அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளுக்கு சிறந்த முடிவுகளைத் தந்தது என்று வங்களாதேஷ் மருத்துவர்கள் விளக்கினர். இரண்டு மருந்துகளும் சுவாசக் கோளாறால் அனுமதிக்கப்பட்ட 60 நோயாளிகளுக்கு வழங்கப்பட்டன. அதன் பின்னர் அவர்கள் COVID-19 க்கு நேர்மறை சோதனை செய்தனர்.

மேலும் படிக்க: கொரோனா நெருக்கடியால் 1,100 ஊழியர்களை ஸ்விக்கி பணிநீக்கம் செய்கிறது

60 நோயாளிகளும் நான்கு மருந்துகளின் கலவையுடன் நான்கு நாட்களின் கால இடைவெளியில் குணமடைந்துள்ளனர் என்று மருத்துவர்கள் மேலும் தெரிவித்தனர். இது அதிர்ச்சியூட்டும் வகையில் உள்ளது. எச்.ஐ.வி-மருந்து காம்போ (லோபினாவிர் மற்றும் ரிடோனாவிர்) உள்ளிட்ட நாவல் கொரோனா வைரஸின் சிகிச்சைக்காக உலகெங்கிலும் உள்ள மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் வெவ்வேறு சேர்க்கைகளை முயற்சித்து வருகிறார்கள் என்பதைக் கவனிக்க வேண்டியது அவசியம். ஆனால் அவற்றின் செயல்திறனைப் புரிந்து கொள்ள போதுமான ஆய்வுகள் நடத்தப்படவில்லை.

குணமடையும் நம்பிக்கை:
மேலும் வங்களாதேஷ் மருத்துவக் குழு மருந்துகளின் கலவையின் செயல்திறனைப் பற்றி "நூறு சதவிகிதம் நம்பிக்கையுடன்" இருந்தது. மேலும் இந்த சேர்க்கைகள் SARS தொற்றுநோய்களின் போது பயன்படுத்தப்பட்டன என்றும் கூறினார். 

வங்களாதேஷ் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 20,995 ஆக உள்ளது. அங்கு இதுவரை 314 பேர் மரணமடைந்து உள்ளனர். 

Trending News