மணமேடையில் பலியான மணமகன்! அதிர்ச்சி சம்பவம்!

மணக்கோலத்தில் அமர்ந்திருந்த மணமகனை சுட்டுக் கொன்ற சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Last Updated : May 1, 2018, 02:29 PM IST
மணமேடையில் பலியான மணமகன்! அதிர்ச்சி சம்பவம்! title=

மணக்கோலத்தில் அமர்ந்திருந்த மணமகனை சுட்டுக் கொன்ற சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலம், ராம்பூர் என்ற ஒரு கிராமத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் மணக்கோலத்தில் மணமகன் சுனில் வர்மா, மணமடையில் அமர்ந்திருந்தார். அப்போது சுனில் வர்மா அருகில் அவரது நண்பர் ராம் சந்திரா நின்று கொண்டிருந்தார். ராம் சந்திரா கையில் உரிமம் பெற்ற துப்பாக்கி ஒன்றை வைத்திருந்தார்.

இந்த நிலையில் திருமண சடங்குகள் நடந்து கொண்டிருந்த போது ராம் சந்திரா, திடீரென துப்பாக்கியை எடுத்து மணமகன் சுனில் வர்மாவை நோக்கி சுட்டுள்ளார். இதில் சுனில் வர்மா மேடையிலேயே உயிரிழந்தார். மணமகன் சுனிர் வர்மா இறந்து விட்டதை அறிந்த பின்னர், ராம் சந்திரா அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

இதையடுத்து, ராம் சந்திரா மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. மேலும் 302-வது பிரிவின்படி ராம் சந்திரா மீது கொலைவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Trending News