பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு இடையே கர்நாடகா தேர்தல்...

கர்நாடகாவின் 15 இடங்களில் சட்டசபை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு டிசம்பர் 5 வியாழக்கிழமை அன்று கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் நடைபெறவுள்ளது.

Written by - Mukesh M | Last Updated : Dec 4, 2019, 03:42 PM IST
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு இடையே கர்நாடகா தேர்தல்... title=

கர்நாடகாவின் 15 இடங்களில் சட்டசபை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு டிசம்பர் 5 வியாழக்கிழமை அன்று கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை வரும் டிசம்பர் 9-ஆம் தேதி நடைப்பெற்று, அன்றே தேர்தல் முடிவுகள் வெளியாகும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அன்றைய தினம் கர்நாடகாவில் ஆட்சி மாற்றத்திற்கான வாய்ப்பு ஏற்படலாம் எனவும் கூறப்படுகிறது.

கர்நாடகாவின் 15 தொகுதிகளுக்கான (அதானி, காக்வாட், கோகக், யெல்லபுரா, ஹிரேகூர், ராணிபென்னூர், விஜயநகர, சிக்க்பல்லபுரா, கே.ஆர்.புரா, யேஷ்வந்த்புரா, மகாலட்சுமி லேஅவுட், சிவாஜினகர, ஹோசகோட், கே.ஆர். பீட் மற்றும் ஹன்சூர்.) இடைத்தேர்தல் நாளை (டிசம்பர் 5-ஆம் தேதி) நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த தேர்தலில் போட்டியிட 128 சுயேச்சைகள் உட்பட 248 வேட்பாளர்கள் களத்தில் இறங்கியுள்ளனர் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பாஜக-வும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்-மதச்சார்பற்ற (JDS) ஆகியவை 15 இடங்களிலும் தனித்தனியாக போட்டியிடுகின்றன, எனவே இத்தேர்தல் மும்முணை போட்டிக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக கர்நாடகா இடைத்தேர்தல் தொடர்பான தேதியினை கடந்த நவம்பர் 13-ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த அறிவிப்பின் படி வேட்புமனு தாக்கல் செய்வதற்கான தேதி நவம்பர் 18 என குறிப்பிடப்பட்டது. மேலும் வாக்குப்பதிவு டிசம்பர் 5 மற்றும் வாக்கு எண்ணிகை டிசம்பர் 9-ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவத்தது. இந்த அறிவிப்பின் படி கர்நாடகா மாநிலத்தில் இடைத்தேர்தல் தொடர்பான பணிகள் வேகம் பெற்றுள்ளது.

இந்த ஆண்டு துவக்கத்தில் காங்கிரஸ்-JD(S) கூட்டணியில் இருந்த 13 MLA-க்கள் தங்களது கிளர்ச்சின் பின் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். குறிப்பிடத்தக்க வகையில், காங்கிரஸ்-JD(S)  கிளர்ச்சி MLA-க்களில் 17 பேரில் 15 பேர் பெங்களூரில் முதலமைச்சர் BS எடியூரப்பா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 MLA-க்களில், MDB நாகராஜ் ஏற்கனவே பாஜகவில் உறுப்பினராக உள்ளார், ரோஷன் பேக் பாஜகவில் சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத்தொடர்ந்து 17 கிளர்ச்சி காங்கிரஸ்-JD(S) MLA-க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்ற முடிவை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. பின்னர் கிளர்ச்சி சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த ஆண்டு ஜூலை மாதம் பதவி விலகல் எதிர்ப்பு சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் 2023-ஆம் ஆண்டில் முடிவடையும் தற்போதைய சட்டசபையின் காலத்திற்கு தேர்தலில் போட்டியிட சபாநாயகர் தடை விதித்திருந்தார்.

இதனையடுத்து அதிருப்தி அடைந்த MLA-க்கள் தங்களது தகுதிநீக்கத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடினர். சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிராக அவர்களுக்கு விதிக்கப்பட்ட தடையை அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக நீதிமன்றத்தின் உதவியை நீடிய கிளர்ச்சி MLA-க்களுக்கு உதவும் வகையில், கிளர்ச்சி MLA-க்கள் தேர்தலில் போட்டியிடலாம் என உச்சநிதீமன்றம் அறிவித்தது. உச்சநீதிமன்றத்தின் அறிவிப்பினை அடுத்து நாளை நடைபெறும் இடைத்தேர்தலில் தகுகி நீக்கம் செய்யப்பட்ட MLA-க்கள் பாஜக சார்பில் போட்டியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் மற்றும் JDS-ல் இருந்து 17 MLA-க்கள் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து BS எடியூரப்பா அரசாங்கத்திற்கு இந்த இடைத்தேர்தல் அவசியமானதாக பார்க்கப்படுகிறது. கர்நாடக சட்டசபையில் மொத்தம் 207 MLA-க்கள் உள்ளனர், அவர்களில் 104 பேர் பாஜக-வைச் சேர்ந்தவர்கள்.

தற்போது, ​​காங்கிரஸில் 65 MLA-க்கள் உள்ளனர், JDS 34 MLA-க்களை கொண்டுள்ளனர்.  ஆக எதிர்க்கட்சியில் 99 MLA-க்கள் உள்ளனர். இந்த இரு கட்சிகளும் பாஜக-வை அதிகாரத்திலிருந்து விலக்கி வைக்க விரும்பினால் இடைத்தேர்தலில் உள்ள 15 இடங்களையும் வெல்ல வேண்டும். மாறாக பாஜக கனிசமான வெற்றி பெறும் பட்சத்தில் 2023 வரையிலும் பாஜக இடையூறு இன்று பெரும்பான்மை ஆட்சியை தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News