PF உறுப்பினர்களுக்கு முக்கிய செய்தி: பணம் எடுக்கும் விதிகளில் மாற்றம்... இந்த வரம்பு அதிகரித்தது

PF Withdrawal Limit: பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சவால்களை குறைக்கும் நோக்கில் EPFO ​​செயல்பாடுகளை அதிகரிக்க அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 21, 2024, 12:22 PM IST
  • புதிய டிஜிட்டல் உள்கட்டமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.
  • எந்தெந்த தேவைகளுக்காக பிஎஃப் தொகையை எடுக்கலாம்?
  • PF கணக்கிலிருந்து எப்படி பணத்தை எடுப்பது எப்படி?
PF உறுப்பினர்களுக்கு முக்கிய செய்தி: பணம் எடுக்கும் விதிகளில் மாற்றம்... இந்த வரம்பு அதிகரித்தது title=

PF Withdrawal Limit: PF உறுப்பினர்களுக்கு ஒரு அட்டகாசமான அப்டேட் உள்ளது. அவர்கள் தங்கள் கணக்கிலிருந்து எடுக்கும் தொகையின் வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO ஒரு பெரிய மாற்றத்தை செய்துள்ளது. பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் இனி 50 ஆயிரத்துக்கு பதிலாக ரூ.1 லட்சம் வரை எடுக்கலாம். இந்த வார தொடக்கத்தில் மத்திய அரசின் 100 நாட்கள் நிறைவு விழாவை ஒட்டி நடந்த விழாவில், மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதுமட்டுமின்றி, விதிகளில் மற்றொரு மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. இவற்றை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.

EPFO Update: புதிய விதிகள்

இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) இனி அவசர காலங்களில் பணம் தேவைப்படும்போது, முன்பை விட அதிக பணத்தை எடுக்க முடியும் என்று மன்சுக்கு மாண்டவியா தெரிவித்தார். இதுமட்டுமின்றி, பணியை துவங்கிய 6 மாதங்களுக்குள் பணம் எடுக்கும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இபிஎஃப் சந்தாதாரர்கள் (EPF Subscribers) பணம் எடுக்க நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. தற்போது ஆறு மாதங்களுக்குள் வேலையை விட்டு வெளியேறினாலும் ஊழியர்கள் இபிஎஃப் கணக்கிலிருந்து (EPF Account) பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.

EPFO Update: புதிய டிஜிட்டல் உள்கட்டமைப்பும் தொடங்கப்பட்டுள்ளது

பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சவால்களை குறைக்கும் நோக்கில் EPFO ​​செயல்பாடுகளை அதிகரிக்க அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். புதிய டிஜிட்டல் உள்கட்டமைப்பை அறிமுகப்படுத்துவதாக அமைச்சர் அறிவித்தார். இது வித்ட்ரா செய்யும் செயல்முறையை எளிதாக்கி பணத்தை விரைவாக எடுக்க அனுமதிக்கும். 

PF Withdrawal: எந்தெந்த தேவைகளுக்காக பிஎஃப் தொகையை எடுக்கலாம்?

- இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு பல வகையான சேவைகள் வழங்கப்படுகின்றன.
- பணி ஒய்வுக்கு பின்னர் இபிஎஃப் மற்றும் இபிஎஸ் தொகை கார்ப்பஸ் மற்றும் ஓய்வூதியமாக கிடைக்கின்றன.
- இது தவிர பணி ஓய்வுக்கு முன்னர் மருத்துவம் அல்லது பிற முக்கிய நோக்கங்களுக்காகவும் இபிஎஃப் தொகையை (EPF Amount) எடுக்கலாம்.
- மருத்துவம், திருமணம், கல்வி அல்லது பிற முக்கிய குடும்பத் தேவைகளுக்கு PF -இல் இருந்து பணத்தை எடுக்கலாம்.
- அவசரகால நிதியாக, PF கணக்கிலிருந்து எடுக்கப்படும் தொகையின் வரம்பு தற்போது ரூ.50,000 -இல் இருந்து ரூ. 1 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு நவராத்திரிக்கு முன் தீபாவளி: அதிரடி டிஏ ஹைக்.... எப்போது, எவ்வளவு?

PF கணக்கிலிருந்து எப்படி பணத்தை எடுப்பது எப்படி?

- PF கணக்கு வைத்திருப்பவர்கள் மருத்துவ சிகிச்சை, கல்வி அல்லது குடும்பம் தொடர்பான ஏதேனும் அவசரநிலைகளில் EPFO ​​கணக்கிலிருந்து பணத்தை எடுக்கலாம்.
- இதற்கு முதலில் EPFO ​​உறுப்பினர் இ-சேவை போர்ட்டலுக்கு செல்ல வேண்டும்.
-  இங்கே உறுப்பினர் பிரிவுக்குச் (Member Section) செல்லவும்.
- அதப் பின்னர் UAN (Universal Account Number), கடவுச்சொல் மற்றும் கேப்ட்சாவைப் பயன்படுத்தி லாக் இன் செய்யவும்.
- லாக் இன் செய்தவுடன், ‘Online Services’ டேப்பிற்கு சென்று, டிராப் டவுன் மெனுவிலிருந்து  ‘Claim (Form-31, 19, 10C and 10D)’  -ஐத் தேர்ந்தெடுக்கவும். 
- அடுத்து தொடர்வதற்கு முன், பெயர், பிறந்த தேதி மற்றும் பிற தகவல்கள் போன்ற உங்கள் தனிப்பட்ட விவரங்களைச் செக் செய்து, தேவைப்பட்டால் விவரங்களைப் புதுப்பிக்கவும்.
- இப்போது பகுதியளவு தொகையை எடுக்க படிவம் 31ஐத் தேர்ந்தெடுக்கவும்.
- அங்குள்ள பட்டியலிலிருந்து பணத்தை எடுப்பதற்கான காரணத்தைக் குறிப்பிடவும்.
- இதன் பின்னர், சம்பிட் செய்த பிறகு, ஆதாருடன் இணைக்கப்பட்ட உங்கள் மொபைல் எண்ணில் OTP வரும், அதை உள்ளிடவும்.
- சமர்ப்பித்த பிறகு, ‘Online Services’ என்ற டேபில் ‘Track Claim Status’ என்பதன் கீழ் உங்கள் க்ளெய்ம் ஸ்டேடசை செக் செய்யலாம். 
- க்ளெய்ம் செய்து 7 முதல் 10 வேலை நாட்களுக்குள் வழக்கமாக EPFO ​​உங்கள் வங்கிக் கணக்கில் தொகையை மாற்றும்.

மேலும் படிக்க | அவசர கடனுக்கு அரேஞ் செய்வது எப்படி? இந்த 4 வழிகளில் உடனடியாக கடன் பெறலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News