அக்டோபர் 1 முதல் புதிய விதி அமல்.... அனைத்திற்கும் ஒரே ஆவணமாகிறது பிறப்பு சான்றிதழ்!

2023 அக்டோபர் 1ம் தேதி முதல், ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், அரசுப் பணிகளுக்கான நியமனம், திருமணப் பதிவு, கல்வி நிறுவனங்களில் சேர்க்கை, வாக்காளர் பட்டியல் தயாரித்தல், பாஸ்போர்ட் வழங்குதல் போன்ற பல சேவைகளுக்கு விண்ணப்பிக்கும் போது பிறப்புச் சான்றிதழ்கள்முதன்மை ஆ வணமாகச் செயல்படும்

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 29, 2023, 05:27 PM IST
  • பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்தம்) சட்டம், 2023.
  • பல நோக்கங்களுக்காக பிறப்பு மற்றும் இறப்புகளின் தேசிய தரவுத்தளம் பயன்படுத்தப்படும்.
  • மாநில அளவிலான அதிகாரிகள் உள்ளூர் தரவுத்தளத்தையும் பயன்படுத்தலாம்.
அக்டோபர் 1 முதல் புதிய விதி அமல்.... அனைத்திற்கும் ஒரே ஆவணமாகிறது பிறப்பு சான்றிதழ்! title=

Registration of Births and Deaths (Amendment) Act, 2023: 2023 அக்டோபர் 1ம் தேதி முதல், ஆதார் அட்டை (Aadhaar Card), ஓட்டுநர் உரிமம் ((Driving License), அரசுப் பணிகளுக்கான நியமனம், திருமணப் பதிவு, கல்வி நிறுவனங்களில் சேர்க்கை (School & College Admission), வாக்காளர் பட்டியல் தயாரித்தல், பாஸ்போர்ட் வழங்குதல் போன்ற பல சேவைகளுக்கு விண்ணப்பிக்கும் போது பிறப்புச் சான்றிதழ்கள்  (Birth Certificate) முதன்மை ஆவணமாகச் செயல்படும். பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்தம்) சட்டம், 2023 மூலம் மேற்கூறிய பணிகளுக்கு பிறப்புச் சான்றிதழை ஒரே ஆவணமாகப் பயன்படுத்த அனுமதிக்கிறது.  இந்த புதிய நடைமுறை, அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகிறது என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்தம்) சட்டம், 2023 செயல்படுத்தப்படும் தேதியை அறிவிக்கும் போது, மத்திய உள்துறை அமைச்சகம், "பதிவு செய்யப்பட்ட பிறப்பு மற்றும் இறப்புகளின் தரவுத்தளத்தை உருவாக்க இது உதவும். டிஜிட்டல் பதிவு மூலம் பொது சேவைகள் மற்றும் சமூக நல திட்டங்களை சிறப்பாகவும் வெளிப்படையாகவும் வழங்குவதை உறுதி செய்யும் " என்றும் கூறியஹ்டு குறிப்பிடத்தக்கது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, "பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்தம்) சட்டம், 2023 (2023 20) இன் பிரிவு 1 இன் துணைப்பிரிவு (2) மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, மத்திய அரசு இதன் மூலம் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்துகிறது. 2023 அக்டோபர் 1 , மேலே கூறப்பட்ட சட்டத்தின் விதிகள் நடைமுறைக்கு வரும் தேதியாகும்."

பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்தம்) சட்டம், 2023 மசோதா இந்த ஆண்டு மழைக்கால கூட்டத்தொடரின் போது நாடாளுமன்றத்தின் (Parliament) இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. மக்களவை இந்த மசோதாவிற்கு ஆகஸ்ட் 1 அன்று ஒப்புதல் அளித்தது, அதே நேரத்தில் மாநிலங்கள் அவையில்  7 ஆகஸ்ட் 2023 அன்று நிறைவேற்றப்பட்டது.

மேலும் படிக்க | Investment Tips: பெண்களுக்கான ‘சில’ சிறந்த முதலீட்டு திட்டங்கள்!

பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்தம்) சட்டம், 2023 என்றால் என்ன?

பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்தம்) சட்டம், 2023, 1 அக்டோபர் 2023 முதல் நடைமுறைக்கு வரும். இந்த மசோதாவின்படி, பதிவு செய்யப்பட்ட பிறப்பு மற்றும் இறப்புகளின் தேசிய தரவுத்தளத்தை பராமரிக்க பதிவாளர் ஜெனரலுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அரசால் நியமிக்கப்பட்ட தலைமைப் பதிவாளர்கள் மற்றும் உள்ளூர் பகுதிப் பதிவாளர்கள் பதிவு செய்யப்பட்ட பிறப்பு மற்றும் இறப்புகளின் தரவை தேசிய தரவுத்தளத்தில் பகிர்ந்து கொள்ளக் கடமைப்பட்டுள்ளனர்.

பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்தம்) சட்டம், 2023: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய அம்சங்கள்:

1. மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பிறகு, புதிய சட்டத்தின்படி, ரேஷன் கார்டுகள், மக்கள் தொகைப் பதிவு, வாக்காளர் பட்டியல் மற்றும் பல நோக்கங்களுக்காக பிறப்பு மற்றும் இறப்புகளின் தேசிய தரவுத்தளம் பயன்படுத்தப்படும்.

2. மருத்துவமனையில் இறப்பு மற்றும் பிறப்புகளை பதிவாளரிடம் தெரிவிப்பதைத் தவிர, ஆதார் எண் போன்ற பெற்றோரின் பிற விவரங்களை வழங்க வேண்டும் என்று புதிய சட்டம் கட்டளையிடுகிறது.

3. மாநில அரசின் ஒப்புதலுக்குப் பிறகு, மாநில அளவிலான அதிகாரிகள் உள்ளூர் தரவுத்தளத்தையும் பயன்படுத்தலாம்.

4. பதிவாளரின் ஏதேனும் உத்தரவால் ஒருவர் அதிருப்தி அடைந்தால், அவர்/அவள் மேல்முறையீடு செய்யலாம்; அதற்கு எதிராக 30 நாட்களுக்குள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேல்முறையீடு செய்த சரியான தேதியிலிருந்து 90 நாட்களுக்குள் இது தொடர்பான தங்கள் முடிவை அறிவிப்பார்கள்.

5. இந்தச் சட்டத்தின் விதிகள் வளர்ப்பு பெற்றோர் (நிறுவனம் அல்லாதது), உயிரியல் பெற்றோரின் வாடகைத் தாய், திருமணமாகாத தாய்மார்கள் ஆகியோருக்கும் பொருந்தும்.

மேலும் படிக்க | செக்கில் கையொப்பமிடும் போது ‘இந்த’ தவறுகளைச் செஞ்சுடாதீங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News