அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட், ஓய்வூதியம் பெறுவோருக்கு பம்பர் பலன்

Old Pension Vs NPS: மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமையன்று அகவிலைப்படியை 4 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்தியது. இதன் மூலம் 47.58 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 69.76 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 25, 2023, 09:52 AM IST
  • அகவிலைப்படியை 4 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்தியது.
  • புதிய ஓய்வூதிய முறையை ஆய்வு செய்ய புதிய குழு.
  • நிர்மலா சீதாராமன் மசோதாவை தாக்கல் செய்தார்.
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட், ஓய்வூதியம் பெறுவோருக்கு பம்பர் பலன் title=

தேசிய ஓய்வூதியத் திட்டம்: புதிய ஓய்வூதியத் திட்டத்திற்காக நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதை தெரிந்துக்கொண்டால் நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள். அந்தவகையில் மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமையன்று அகவிலைப்படியை 4 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்தியது. இதன் மூலம் 47.58 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 69.76 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். மத்திய அமைச்சரவையின் பொருளாதார விவகாரக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு, தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் (Information and Broadcasting Minister Anurag Thakur) நிருபர்களிடம் கூறியதாவது: அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகிய இரண்டும் அதிகரிப்பால், ஆண்டுக்கு 12,815.60 கோடி ரூபாய் பாதிக்கப்படும்.

புதிய ஓய்வூதிய முறையை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது
தற்போது, ​​நாட்டில் புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது, இது புதிய ஓய்வூதிய முறை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஓய்வூதியத் திட்டம் குறித்து அரசு ஊழியர்கள் பலமுறை எதிர்ப்பு தெரிவித்தும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை வழங்கக் கோரியும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த மாற்றத்திற்குப் பிறகு, மத்திய ஊழியர்களுக்கு அகவிலைப்படியும், ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் தவணையாக அகவிலைப்படியும் ஜனவரி 1, 2023 முதல் வழங்கப்படும். ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்ட ஃபார்முலாவின் அடிப்படையில் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களின் காத்திருப்பு முடிவடைந்தது! 4% அதிகரிப்புக்கு ஒப்புதல்

நிர்மலா சீதாராமன் மசோதாவை தாக்கல் செய்தார்
அரசு ஊழியர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Union Finance Minister Nirmala Sitharaman) வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் ஒரு மசோதாவை தாக்கல் செய்தார், அதன்படி அதில் புதிய குழு அமைக்கப்பட்டது. மேலும் புதிய ஓய்வூதிய முறையை முழுமையாக மறுபரிசீலனை செய்வது இந்தக் குழுவின் பணியாகும். மேலும் இந்தக் குழுவின் தலைமைப் பொறுப்பு மத்திய நிதிச் செயலருக்கு வழங்கப்பட்டது.

புதிய ஓய்வூதிய முறை எப்போது நடைமுறைக்கு வந்தது
இந்த புதிய ஓய்வூதியத் திட்டம் 2004 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது, இது பழைய ஓய்வூதிய முறையை அதாவது OPS ஐ மாற்றியது. NPS மற்றும் OPS திட்டங்களில் சில சிறப்புகள் உள்ளன மேலும் சில குறைபாடுகளும் உள்ளன. பழைய ஓய்வூதிய முறைக்கு மீண்டும் செல்வது அரசாங்கத்தின் மீது மேலும் சுமையை அதிகரிக்கும்.

மேலும் படிக்க | Old Pension Scheme: ஊழியர்களுக்கு மிகப்பெரிய அப்டேட், உருவாகிறது புதிய NPS குழு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News