SCSS: மூத்த குடிமக்களுக்கான அட்டகாச முதலீட்டுத்திட்டம், சூப்பரான வருமானம்!!

Senior Citizens’ Saving Scheme: எஸ்சிஎஸ்எஸ் எனப்படும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் ஐந்தாண்டுகளில் முதிர்ச்சியடைகிறது. இது மூத்த குடிமக்களுக்கான மிகச்சிறந்த திட்டமாகும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 22, 2022, 11:29 AM IST
  • இந்தத் திட்டத்தில் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதலீடு செய்யலாம்.
  • அதிகபட்சமாக 15 லட்சம் முதலீடு செய்யலாம்.
  • இந்தத் திட்டத்தில் அதற்கு மேல் டெபாசிட் செய்ய முடியாது.
SCSS: மூத்த குடிமக்களுக்கான அட்டகாச முதலீட்டுத்திட்டம், சூப்பரான வருமானம்!! title=

மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம்: நேற்று சர்வதேச மூத்த குடிமக்கள் தினம் கொண்டாடப்பட்டது. நம் நாட்டில் சராசரி வயது படிப்படியாக அதிகரித்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், மூத்த குடிமக்களின் சவால்களும் அதிகரித்து வருகின்றன. அவர்களின் நிதிப் பிரச்சனைகளை மனதில் கொண்டு, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் 2004 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம், மூத்த குடிமக்களின் நிதித் தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சிக்கப்படுகிறது. இந்த சிறுசேமிப்புத் திட்டம் பூஜ்ஜிய அபாயத்தைக் கொண்டுள்ளது. மேலும் தற்போது 7.4 சதவிகிதம் என்ற சிறந்த வருமானத்தை அளிக்கிறது. அதைப் பற்றி இந்த பதிவில் விரிவாக அறிந்து கொள்வோம்.

எஸ்சிஎஸ்எஸ் எனப்படும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் ஐந்தாண்டுகளில் முதிர்ச்சியடைகிறது. இதில் ஆண்டுதோறும் வட்டி பெறப்படுகிறது. ஆனால் வட்டி காலாண்டு அடிப்படையில் செலுத்தப்படுகிறது. இதை ஒற்றை அல்லது கூட்டு கணக்கு வைத்திருப்பவர்களும் திறக்கலாம். இந்தத் திட்டத்தில் தபால் அலுவலகம் அல்லது வங்கியில் பதிவு செய்யலாம். இத்திட்டத்தில் பயன்பெற குறைந்தபட்சம் 60 வயது நிரம்பியிருக்க வேண்டும். கணக்கு வைத்திருப்பவர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். இந்த கணக்கை திறப்பவர்கள் HUF அல்லது NRI ஆக இருக்க முடியாது.

மேலும் படிக்க | UPI பண பரிமாற்றத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படலாம்: ரிசர்வ் வங்கி சூசகம் 

7.4 சதவிகித வட்டி

வட்டி விகிதத்தைப் பற்றி பேசுகையில், செப்டம்பர் 2022 காலாண்டில், ஆண்டு அடிப்படையில் 7.4 சதவீதம் வட்டி செலுத்தப்படுகிறது. ஒவ்வொரு காலாண்டிலும் நிதி அமைச்சகத்தால் வட்டி விகிதம் குறித்த முடிவு எடுக்கப்படுகிறது. வரி அடிப்படையில், இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால், ஒரு நிதியாண்டில் 80சி பிரிவின் கீழ் ரூ.1.5 லட்சம் கழிக்கப்படும்.

குறைந்தபட்ச முதலீடு ரூ 1000, அதிகபட்ச முதலீடு 15 லட்சம்

இந்தத் திட்டத்தில் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக 15 லட்சம் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தில் அதற்கு மேல் டெபாசிட் செய்ய முடியாது. இந்தத் திட்டத்தில் மொத்த தொகை டெபாசிட் செய்யப்படுகிறது. முன்பே குறிப்பிட்டது போல, இதில் முதலீடு செய்வது பிரிவு 80C இன் கீழ் ரூ. 1.5 லட்சம் கழிக்கும் பலனை வழங்குகிறது. இருப்பினும், வட்டிக்கு வரி விதிக்கப்படுகிறது.

50 ஆயிரம் வரை வட்டிக்கு வரி இல்லை

மூத்த குடிமக்கள் ஒரு நிதியாண்டில் 50,000 ரூபாய் வரையிலான வட்டி வருமானத்தில் 80TTB பிரிவின் கீழ் வரி விலக்கு பெறுகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், எஸ்சிஎஸ்எஸ் மூலம் ஒரு வருடத்தில் 50 ஆயிரம் ரூபாய் வரை வட்டி வருமானம் இருந்தால், அதற்கு வரி விதிக்கப்படாது. அதற்கு மேல் வட்டி இருந்தால் அது வரிச் சட்டத்தின் கீழ் வரும்.

மேலும் படிக்க | ரேஷன் அட்டைதாரர்களுக்கு அதிர்ச்சி செய்தி, இனி இந்த வசதி கிடைக்காது 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News