7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு ஜாக்பார்ட்! அடுத்த 15 நாட்களில் நல்ல செய்தி!

7th pay commission: தற்போது ஊழியர்களுக்கு 38% அகவிலைப்படி வழங்கப்பட்டு வரும் நிலையில், அரசு டிஏ உயர்வுக்கு ஒப்புதல் அளித்தால் ஊழியர்களுக்கான அகவிலைப்படி 42 சதவீதமாக உயரும்.  

Written by - RK Spark | Last Updated : Feb 25, 2023, 07:14 AM IST
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது அகவிலைப்படி 38% வழங்கப்படுகிறது.
  • அரசு டிஏ-வை 4% உயர்த்தினால் ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 42% ஆக உயரும்.
  • ஹோலி பண்டிகை சமயத்தில் ஊழியர்களுக்கு டிஏ உயர்வு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு ஜாக்பார்ட்! அடுத்த 15 நாட்களில் நல்ல செய்தி! title=

ஹோலி பண்டிகையை முன்னிட்டு மக்கள் சந்தோஷமாக இருக்கும் நிலையில் மத்திய அரசு அதன் ஊழியர்களை மேலும் சந்தோஷப்படுத்தும் விதமாக ஒரு செய்தியினை அறிவிக்கப்போகிறது.  அதாவது இன்னும் 15 தினங்களில் மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இது மட்டுமின்றி இதுவரை அரசு ஊழியர்கள் வைத்த கோரிக்கைகளுக்கும் மத்திய அரசு தீர்வு காணும் என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.  மார்ச் 1-ம் தேதி நடைபெற உள்ள அடுத்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அகவிலைப்படி உயர்வு குறித்த பெரிய முடிவினை அரசு எடுக்கும் என்று கூறப்படுகிறது.  நடைபெறவுள்ள கூட்டத்தில் அகவிலைப்படி உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால் வரும் ஹோலி பண்டிகைக்கோ அல்லது அதற்கு முன்னரோ அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | 8th Pay Commisson: 44% ஊதிய உயர்வு, மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள் 

அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாகவே அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்தது வந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்த செய்தி ஊழியர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.  பொதுவாக மத்திய அரசு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியர்களுக்கான அகவிலை நிவாரணம் ஆகியவற்றை ஒரு நிதியாண்டில் இரண்டு முறைகள் திருத்தியமைக்கிறது.  ஒரு ஆண்டில் முதல் தடவையாக ஜனவரி மாதத்திலும், இரண்டாவது முறையாக ஜூலை மாதத்தில் திருத்தியமைக்கிறது.   மத்திய அரசு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 7வது சிபிசி-ன் கீழ் அகவிலைப்படியை உயர்த்தி பின்னர் செப்டம்பரில் உயர்த்தியது.  இதனை தொடர்ந்து மத்திய அரசு இந்த 2023-ம் ஆண்டில் மே மாதம் அகவிலைப்படியை (டிஏ) உயர்த்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மத்திய அரசு அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தியதும், அதுவரை 34 சதவீதத்தில் இருந்த டிஏ 38 சதவீதமாக அதிகரித்தது.  தற்போது வெளியாகியுள்ள செய்திகளின்படி, மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு இந்த முறையும் 4% அகவிலைப்படியை உயர்த்தும் என்று கூறப்படுகிறது, இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல்கள் எதையும் அரசு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  தற்போது ஊழியர்களுக்கு 38% அகவிலைப்படி வழங்கப்பட்டு வரும் நிலையில், அரசு டிஏ உயர்வுக்கு ஒப்புதல் அளித்தால் ஊழியர்களுக்கான அகவிலைப்படி 42 சதவீதமாக உயரும்.  இந்த முறை அகவிலைப்படி உயர்வின் மூலம் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க | இலவச ரேஷன் பெறுபவர்களுக்கு ஜாக்பாட், முக்கிய தகவல் வெளியீடு 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News