உலகின் பணக்கார பெண்மனி, 94 வயதில் காலமானார்!

உலகின் பணக்கார பெண்மனியான ‘லில்லியன் பெட்டென்கார்ட் (94)’ வயது முதிர்ச்சி காரணமாக காலமானார். 

Last Updated : Sep 22, 2017, 11:37 AM IST
உலகின் பணக்கார பெண்மனி, 94 வயதில் காலமானார்! title=

பாரீஸ்: உலகின் பணக்கார பெண்மனியான ‘லில்லியன் பெட்டென்கார்ட் (94)’ வயதுமுதிர்ச்சி காரணமாக காலமானார். 

பாரிஸில் தனது வீட்டினில் வியாழக்கிழமை அதிகாலையில் லில்லியன் பெட்டென்கார்ட் இறந்ததாக அவரது மகள் பெட்டென்ஸ்கார்ட்-மேயர்ஸ் உறுதிபடுத்தியுள்ளார்.

போர்பஸ் நிறுவனத்தின் அறிக்கையின்படி,. உலக பணக்காரர் பட்டியலில் 14-ஆம் இடத்தில் இருந்தவர் லில்லியன் பெட்டென்கார்ட். 

அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றின் முதன்மை பங்குதாரராக இருந்த லில்லியன் பெட்டென்கார்ட் உலகின் பணக்கார பெண்மணியாக கருதப்பட்டார். இந்நிலையில், வயது முதிர்ச்சி காரணமாக நேற்று லில்லியன் பெட்டென்கார்ட் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். 

கடந்த 2012-ஆம் ஆண்டிற்கு பின்னர் இவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் தனது வீட்டில் ஓய்வில் இருந்து வந்துள்ளார்.

போர்பஸ் இதழ் கருத்தின்படி, பெட்டென்கார்ட் 39.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய சொத்துக்களுக்கு அதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News