துருக்கியில் குண்டுவெடிப்பு- ஒருவர் பலி, 30 பேர் காயம்

Last Updated : Nov 4, 2016, 03:18 PM IST
துருக்கியில் குண்டுவெடிப்பு- ஒருவர் பலி, 30 பேர் காயம் title=

தென்கிழக்கு துருக்கியில் வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார் மேலும் 30 பேர் காயம் அடைந்துள்ளனர். தியார்பாகிர் பகுதியில் வெடிகுண்டு வெடித்து. 

துருக்கி நாட்டில் ஆயுதம் ஏந்திய குர்திஸ்தான் தொழிலாளர்கள் கட்சி அரசுக்கு எதிராக வன்முறை தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது. இதனையடுத்து இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்து உள்ளது. காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். 

இந்த வெடிகுண்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார் மேலும் 30 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

Trending News