ரஷியன் வான்வழி தாக்குதலில் சிரியாவில் துருக்கிய வீரர்கள் மரணம்

Last Updated : Feb 10, 2017, 10:52 AM IST
ரஷியன் வான்வழி தாக்குதலில் சிரியாவில் துருக்கிய வீரர்கள் மரணம் title=

சிரியா நாட்டில் முகாமிட்டுள்ள துருக்கி படையினரின் முகாம் மீது ரஷ்யா தவறுதலாக நடத்திய தாக்குதலில், 3 பேர் பலியாகினர். 

அந்நாட்டின் அல் பாப் பகுதியை ஐஎஸ் தீவிரவாதிகள் ஆக்கிரமித்துள்ளனர். அவர்களை அங்கிருந்து விரட்டும் நோக்கில், துருக்கி மற்றும் அமெரிக்கப் படைகள் ஒருபுறமும், ரஷ்யா, சிரியா படைகள் மறுபுறமும் தாக்குதல் நடத்திவருகின்றனர்.

இந்நிலையில், அங்குள்ள துருக்கி படையினரின் முகாமை, ஐஎஸ் தீவிரவாதிகளின் முகாம் என, ரஷ்யா தவறுதலாக நினைத்து, திடீரென போர் விமானம் மூலமாகக் குண்டுகள் வீசி, தாக்கியது. இதில், 3 வீரர்கள் உயிரிழந்தனர்.

இதன்பிறகே, தவறை உணர்ந்த ரஷ்யா, இதுபற்றி துருக்கியிடம் மன்னிப்பு கோரியுள்ளது. 

Trending News