ஜோ பிடனின் தாத்தா சொன்ன அட்வைஸ்! வெள்ளை மாளிகை விருந்தில் சிரித்த பிரதமர் மோடி

White House State Dinner: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்றும் வெள்ளை மாளிகைக்குச் செல்கிறார். அங்கு, அரசு வழங்கும் விருந்தில் கலந்துக் கொள்வார்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 23, 2023, 10:10 AM IST
  • வெள்ளை மாளிகையில் இந்தியப் பிரதமர்
  • வெள்ளை மாளிகையில் பிரதமர் மோதிக்கு விருந்து
  • செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் பிரதமர் மோடி
ஜோ பிடனின் தாத்தா சொன்ன அட்வைஸ்! வெள்ளை மாளிகை விருந்தில் சிரித்த பிரதமர் மோடி title=

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணத்தில் ஒருபகுதியாக, அவர் இன்றும் வெள்ளை மாளிகைக்குச் செல்கிறார். அங்கு செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துக் கொள்வார். 

வெள்ளை மாளிகையில் நேற்று இரவு நடைபெற்ற இரவு விருந்தில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல தொழிலதிபர்கள் கலந்துக் கொண்டனர். வணிகம், ஃபேஷன், பொழுதுபோக்கு உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க நபர்கள் விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர். பிரபல வடிவமைப்பாளர் ரால்ப் லாரன், திரைப்படத் தயாரிப்பாளர் எம். நைட் ஷியாமலன் மற்றும் டென்னிஸ் ஜாம்பவான் பில்லி ஜீன் கிங் ஆகியோர் இந்த விருந்தில் கலந்துகொண்டனர். ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களின் தலைவர்களும் விழாவில் கலந்து கொண்டனர்.

அமெரிக்க அதிபர் ஜோ பிடனும், பிரதமர் நரேந்திர மோடியும் வெள்ளை மாளிகையில் இரவு விருந்தின் போது, தங்கள் வாழ்வின் முக்கிய தருணங்களைப் பகிர்ந்து கொண்டனர். இரு தலைவர்களும் மது அருந்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

சுமார் 400 விருந்தினர்கள் கலந்துக் கொண்ட விருந்தில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பிடன், தனது தாத்தா அம்ப்ரோஸ் ஃபின்னேகனின் வார்த்தைகளை நினைவு கூர்ந்தார். நீங்கள் ஒரு டோஸ்ட் கொடுத்தால், உங்கள் கிளாஸில் ஆல்கஹால் இல்லை என்றால், அதை உங்கள் இடது கையால் கொடுக்க வேண்டும் என்று ஃபின்னேகன் சொல்வார் என்று பிடன் தெரிவித்தார்.

இது கேலிக்காக சொல்லவில்லை, ஆனால் இது உண்மை என்று அமெரிக்க அதிபர் சொன்னபோது, பிடனின் இந்த வார்த்தைகளை மொழிபெயர்ப்பாளர் இந்தியில் மொழிபெயர்த்தார். அதைக்கேட்டு ​​பார்வையாளர்கள் சிரித்தனர். பிடனின் தாத்தா, விருந்து எப்படி கொடுக்க வேண்டும் என்று சொன்ன  வேடிக்கையான கதை அனைவரையும் சிரிக்க வைத்தது. பிரதமர் மோடியால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.

மேலும் படிக்க | ஜில் பிடனுக்கு அரிய பச்சை வைரம்... ஜோ பைடனுக்கு சந்தனப்பெட்டி... பிரதமர் மோடியின் பரிசுகள்!

தங்கள் அழைப்பை ஏற்று விருந்தில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்ட அமெரிக்க அதிபர், பிரதமர் மோடியுடன் அற்புதமான நேரத்தை அனுபவித்தோம். இன்றிரவு, இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான சிறந்த நட்புறவைக் கொண்டாடுகிறோம் என்று கூறினார்.

பிரதமர் மோடி, இரவு விருந்தை வழங்கிய ஜோ பிடன் மற்றும் முதல் பெண்மணி ஜில் பிடனுக்கு நன்றி தெரிவித்து, அவர்களை தங்கள் வீட்டிற்கு வரவேற்றார். இரவு உணவிற்கு நன்றி தெரிவித்த அவர், தனது இந்த அரசுமுறைப் பயணத்தை வெற்றியடையச் செய்ய திருமதி ஜில் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டினார். எனக்காக உங்கள் வீட்டின் கதவுகளைத் திறந்துவிட்டது, எனக்கு மிகவும் மரியாதைக்குரிய விஷயம் என்று பிரதமர் மோடி நெகிழ்ச்சியிஉடன் கூறினார்.

இரு நாட்டு மக்களும் கலந்து கொண்டதால் இன்று மாலை சிறப்பு பெற்றதாக பிரதமர் மோடி தெரிவித்தார். இங்கு வந்துள்ள விருந்தினர்கள் அனைவரும், அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான ஆற்றல்மிக்க உறவையும், அதன் மகத்தான ஆற்றலையும் அடையாளப்படுத்துவதாக பிரதமர் குறிப்பிட்டார். 

மேலும் படிக்க | பிரதமர் நரேந்திர மோதியின் அமெரிக்கப் பயணத்தினால் இந்தியாவுக்கு புதிய தொழில்வாய்ப்புகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News