கிரிக்கெட் வீரருக்கு தொடரும் நீதிமன்ற விசாரணை! மேலும் 5 நாட்கள் காவல் நீட்டிப்பு

Sandeep Lamichhane custody extended: பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர் சந்தீப் லமிச்சனேவை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க காத்மாண்டு மாவட்ட நீதிமன்றம் அக்டோபர் 13ஆம் தேதி அனுமதி வழங்கியது.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 13, 2022, 03:20 PM IST
  • கிரிக்கெட்டர் சந்தீப் லமிச்சனேவின் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டது
  • பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார் சந்தீப்
  • காத்மாண்டு மாவட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கியது
கிரிக்கெட் வீரருக்கு தொடரும் நீதிமன்ற விசாரணை! மேலும் 5 நாட்கள் காவல் நீட்டிப்பு title=

காட்மண்டு: நட்சத்திர கிரிக்கெட் வீரர் லாமிச்சானேவின் காவலை 5 நாட்கள் நீட்டித்து நேபாள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர் சந்தீப் லமிச்சனேவை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க காத்மாண்டு மாவட்ட நீதிமன்றம் அக்டோபர் 13ஆம் தேதி அனுமதி வழங்கியது. லாமிச்சனே குற்றமற்றவர் என நீதிமன்றத்தில் கூறி வருகிறார். முன்னதாக அக்டோபர் 6 ஆம் தேதி திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் லாமிச்சேன் கைது செய்யப்பட்டார். அவரை விசாரிப்பதற்கான காலக்கெடு அக்டோபர் 12ஆம் தேதியுடன் முடிவடைந்தது.

காவல்துறை விசாரணை மற்றும் மேலதிக அறிக்கைக்காக கூடுதல் ஏழு நாட்கள் காவலில் கோரப்பட்டது. ஏழு நாட்கள் நீடிக்கும் என்றும் ஒரு தரப்பு விசாரணை ஏற்கனவே முடிவடைந்துவிட்டது என்றும் நாங்கள் நீதிமன்றத்தில் கோரினோம், மேலும், மூன்று நாள் அவகாசம் கேட்டோம், ஆனால் நீதிமன்றம் ஐந்து நாட்கள் மட்டுமே காவலை நீட்டித்தது.

அக்டோபர் 17. மீண்டும் முதல் அக்டோபர் 18 அன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார், போலீசார் தங்கள் விசாரணையை முடித்து விசாரணையின் இறுதி அறிக்கையை சமர்ப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.22 ஆயிரம் கோடி மானியம்; பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு!

பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர் சந்தீப் லமிச்சனேவை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க காத்மாண்டு மாவட்ட நீதிமன்றம் அக்டோபர் 13ஆம் தேதி அனுமதி வழங்கியது. லாமிச்சனே குற்றமற்றவர் என நீதிமன்றத்தில் கூறி வருகிறார்.

சந்தீப் பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம்பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். 17 வயதான ஒரு பெண், ஆகஸ்ட் 21 அன்று காத்மாண்டு மற்றும் பக்தாபூரில் உள்ள பல்வேறு இடங்களுக்கு லாமிச்சானே தன்னை அழைத்துச் சென்றதாகக் கூறி, காத்மாண்டுவின் சினமங்கலில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்து வந்து, பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டினார்.

அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதில் இருந்து அவர் இருக்கும் இடம் தெரியாததால், INTERPOL (சர்வதேச குற்றவியல் காவல் அமைப்பு) அறிவிப்பு வெளியிட்டது. 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் காத்மாண்டு மாவட்ட நீதிமன்றம் அவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்தது.

மேலும் படிக்க | ஹிஜாப் விவகாரம்: கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

கடந்த ஆண்டு நேபாள நாட்டின் கிரிக்கெட் அணியின் கேப்டனாக லெக் ஸ்பின்னர் லமிச்சானே நியமிக்கப்பட்டார். லாமிச்சானே முன்பு நேபாளத்தின் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்கு 2016 ஆம் ஆண்டு ஆசியக் கோப்பையின் போது கேப்டனாக இருந்தார், பின்னர் 2017 ஆம் ஆண்டு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் உலகக் கோப்பை தகுதிச் சுற்றுக்கு கேப்டனாக இருந்தார். இந்தியன் பிரீமியர் லீக்கிலும் (ஐபிஎல்) விளையாடியுள்ளார்.

புகாரைப் பெற்ற போலீசார் தேசிய தண்டனை (கோட்) சட்டம், 2017 இன் பிரிவு 219 இன் கீழ் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

நேபாளத்தின் தேசிய தண்டனை (கோட்) சட்டம், 2017, அத்தியாயம்- 18, பிரிவு 219 இன் கீழ் கற்பழிப்பு குற்றம் ஆகும். பிரிவு 219 (2) கற்பழிப்பை வரையறுக்கிறது, "எந்தவொரு நபரும் ஒரு பெண்ணின் அனுமதியின்றி அல்லது மேஜராகாத பெண்ணுடன் உடலுறவு கொள்வது கற்பழிப்பு ஆகும்." குற்றம் நிரூபிக்கப்பட்டால், லாமிச்சானே 10 முதல் 12 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை எதிர்கொள்ள நேரிடும்.

மேலும் படிக்க | டெங்குக் காய்ச்சல் சிகிச்சைகள்! இந்த அறிகுறி இருந்தால் எச்சரிக்கை அவசியம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News