பிரேசில்: மது பாரில் துப்பாக்கி சூடு: 11 பேர் உயிரிழப்பு

பிரேசில் நாட்டில் மர்ம நபர்கள் மது பாரில் நுழைந்து துப்பாக்கியால் சுட்டதில் 11 பேர் உயிரிழந்தனர்.

Last Updated : May 20, 2019, 10:12 AM IST
பிரேசில்: மது பாரில் துப்பாக்கி சூடு: 11 பேர் உயிரிழப்பு title=

பிரேசில் நாட்டில் மர்ம நபர்கள் மது பாரில் நுழைந்து துப்பாக்கியால் சுட்டதில் 11 பேர் உயிரிழந்தனர்.

பிரேசில் நாட்டின் பாரா மாநிலம், பெலம் நகரில் உள்ள ஒரு மது பாரில் நேற்று மாலை முகமூடி அணிந்தபடி ஒரு பைக் மற்றும் 3 கார்களில் வந்த நபர்கள், பாருக்குள் புகுந்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். 

துப்பாக்கியால் சுட்ட அந்த நபர்கள், அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த கொடூர தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். துப்பாக்கி சூட்டுக்கான காரணம் தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Trending News