வயநாடு நிலச்சரிவு மீட்பு பணிகளுக்காக பெரிய தொகை ஒன்றை தனுஷ் நிவாரணமாக அளித்திருக்கிறார். இது குறித்த பதிவை அவரே ட்விட்டர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருக்கிறார்.
கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவால் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாநில அளவிலான ஓணம் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 405 ஆக உயர்ந்ததுள்ள நிலையில், இன்று 8-வது நாளாக மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
வயநாடு பகுதிக்கு தமிழகத்திலிருந்து டெக்னிக்கல் துறை சார்ந்த அதிகாரிகள் சென்று ஆராய இருக்கிறார்கள் என்றும், தமிழகத்தில் அதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் சூழ்நிலை சரியில்லாததால், உதவ முன்வருவோர் நேரடியாக வயநாட்டிற்கு வரவேண்டாம் என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார்.
வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களின் நிவாரணப் பணிகளுக்காக நடிகர்கள் சூர்யா, கார்த்தி, நடிகை ஜோதிகா ஆகியோர் இணைந்து 50 லட்சம் ரூபாயை கேரள முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர்.
இரவு பகலாகத் தொடர்ந்து 3-வது நாளாக வயநாட்டில் மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 291 ஆக அதிகரித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.