எதன் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ அமைச்சர்களுக்கு வாய்கொழுப்பு என கூறினார் என தெரியவில்லை: செல்லூர் ராஜுவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி
கூட்டுறவுத்துறையில் ஊழல் நடைபெற்றதை நிதியமைச்சர் நீரூபித்தால், தான் அரசியலில் இருந்து விலக தயார் எனவும், நீருபிக்கவில்லை என்றால் அரசியலில் இருந்து விலக அவர் தயாரா என செல்லூர் ராஜூ சவால் விடுத்துள்ளார்.
2ஜி அலைக்கற்றை தொடர்பான ஊழலில் பெரும் பகுதியை ஆ.ராசா கொடுத்திருப்பார் போல, அதனால்தான் அவரை கண்டிக்க ஸ்டாலின் பயப்படுகிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
அதிமுகவை வழக்கு போட்டு நெருக்குகிறார்கள், சலசலப்புக்கு அஞ்ச மாட்டோம், திமுகவுக்கு பதிலடி கொடுக்க மக்கள் தயார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை போலவே, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் ரவுடிகளை அடக்கி ஒடுக்க பல வித நடவடிக்கைகளை எடுத்து வருவதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்தால், ரேஷன் கடைகள் மூலம் வெங்காயத்தை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே ராஜு தெரிவித்தார்.
சென்னை மற்றும் அனைத்து மாநகராட்சிப் பகுதிகளிலும் கிலோ ரூ.45 என்ற விலையில் தரமான வெங்காயம் விற்பனை செய்யும் திட்டத்தை அமைச்சர் செல்லூர் கே. ராஜு (Sellur K. Raju) தொடங்கி வைத்தார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமைனையில் அனுமதிக்கப்பட்ட 74 நாட்கள் சிகிச்சை அளித்தும் பலன் இன்றி டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்தார்.
சில நாட்களுக்கு முன்னதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது நாங்கள் யாரும் பார்க்கவில்லை. சசிகலா தரப்பு என்ன கூறியதோ அதையே மக்களிடம் தெரிவித்தோம்” என்று பேசினார்.
தமிழக சட்டசபை கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று கேள்வி நேரத்திற்கு பிறகு, கூவத்தூர் பேரம் வீடியோ விவகாரம் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அனுமதி கேட்டார்.
ஆனால், இந்த விவகாரம் கோர்ட்டில் உள்ளதால், தீர்மானத்திற்கு அனுமதி வழங்க சபாநாயகர் தனபால் மறுத்தார். இதனால், திமுக எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபையில் அமளியில் ஈடுபட்டனர்.
மேலும் திமுக எம்.எல்.ஏ.,க்கள் அமைதி காக்க வேண்டும் எனவும், சபையை நடத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் சபாநாயகர் வேண்டுகோள் விடுத்தார். அமளி தொடர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் எச்சரித்தார்.
தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 23-ம் தேதி தொடங்கியது. இதற்க்கு பிறகு பட்ஜெட் மீதான எம்.எல்.ஏ.க் களின் விவாதம் மார்ச் மாதம் 24-ம் தேதி முடிவடைந்ததை தொடர்ந்து மறு தேதி குறிப்பிடாமல் சட்டசபை கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை கூட்டம் இன்று துவங்கியது. கேள்வி நேரம் முடிந்ததும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ஓ. பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ., சரவணன் பேசி வெளியான வீடியோ குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.