உ.பி. மாநில அமைச்சரவையில் இருந்து சிவ்பால் யாதவ் உள்ளிட்ட 4 அமைச்சர்களை முதல்வர் அகிலேஷ் யாதவ் ஞாயிற்றுக்கிழமை நீக்கினார்.
சமாஜவாதி கட்சியில் இருந்து அகிலேஷ் யாதவின் ஆதரவாளர் ராம்கோபால் யாதவை அக்கட்சித் தலைவராக முலாயம் சிங் யாதவ் வெளியேற்றியுள்ளார். மேலும் சமாஜவாதி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அமர் சிங்கை மீண்டும் கட்சியில் சேர்த்ததற்கும் அகிலேஷ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அகிலேஷின் ஆதரவாளரான சட்டமேலவை உறுப்பினர் உதய்வீர் சிங் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
உ.பி.யில் அடுத்த ஆண்டு நடக்க உள்ளது சட்டசபை தேர்தல். உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ், பாஜக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பிரசாரத்தை ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் சமாஜ்வாதி கட்சியில் ஏற்பட்டிருக்கும் பிரச்னை காரணமாக அகிலேஷ் யாதவ் தன்னந்தனியாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியில் தேசிய பொதுச்செயலாளர் ராம்கோபால் யாதவ் அவர்கள் அகிலேஷ் யாதவிற்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். மேலும் அவர் கட்சியின் தலைமை தவறு செய்துவிட்டது என்று கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் முலாயம்சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் தலைமையில் சமாஜ்வாடி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அமைச்சரவையில் முலாயமின் சகோதரர் சிவ்பால் யாதவ் அமைச்சராக உள்ளார்.
சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவுக்கும், உ.பி., முதல்வருமான அகிலேஷ் யாதவுக்கு(முலாயம் சிங் யாத மகன்) இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையில் சமாஜ்வாடி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அமைச்சரவையில் முலாயமின் சகோதரர் சிவ்பால் யாதவ் அமைச்சராக உள்ளார்.
உத்தரபிரதேசத்தின் அமைச்சரவையில் முலாயம் சிங் யாதவின் தம்பி சிவ்பால் யாதவ் மூத்த மந்திரியாக தற்போது இருக்கிறார். கடந்த சில மாதங்களாக முதல்-மந்திரி அகிலேசுக்கும், அவரது சித்தப்பாவான சிவ்பால் யாதவுக்கும் இடையே பல பிரச்சினைகளில் கருத்து வேறுபாடு காரணமாக மோதல் ஏற்பட்டது. அந்த மோதல் தற்போது சமாஜ்வாடி கட்சியை கலகலக்கச் செய்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.