மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடி கிராமத்தில் உள்ள வெடி மருந்து குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தது தொடர்பாக பொறையார் போலீஸார் இந்திய குறியீடு வெடிபொருள் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மயிலாடுதுறையில் மகளிர் உரிமை திட்டத்தில் கணக்கெடுத்துக் கொண்டிருந்த கிராம நிர்வாக அலுவலர் மீது தாக்குதல் நடைபெற்றிருக்கும் நிலையில், உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக கிராம நிர்வாக அலுவலர் சங்கம் அறிவித்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் மனைவிக்கு குழந்தை சிகப்பாக பிறந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை சித்திரவதை செய்து கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது நீதிமன்றம்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தில், விபத்தில் சிக்கிய குதிரையும், பந்தய வீரரும் மீண்டெழுந்து முதல் பரிசை வென்று ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
மயிலாடுதுறையில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், அவ்வழக்கில் தொடர்பில்லாத பள்ளி நிர்வாகியின் பெயரை குற்றப்பத்திரிகையில் சேர்க்காமல் இருக்க பணம் கேட்டு மிரட்டியதாக மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சங்கீதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
நிலத் தகராறில் தலையிட்டு கைது நடவடிக்கையில் ஈடுபட்ட டி.எஸ்.பி.-யின் செயலால் பாதிக்கப்பட்டவருக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.