சுதந்திரத்திற்கு முன்பு பல கொடுமையான பஞ்சங்களை சந்தித்த நம் பாரதம் வெறும் 75 ஆண்டுகளில் உலகிற்கே உணவு அளிக்கும் தேசமாக வளர்ந்துள்ளது என ஈஷா சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் சத்குரு பெருமிதத்துடன் கூறினார்.
கொள்ளு ரமணா தற்கொலை செய்து கொண்ட செய்தியை ஈஷா மையத்தினர் காவல்துறைக்கு தெரிவித்ததும், போலீசார் அவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Suicide at Isha Yoga Center: கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் ஆந்திர இளைஞர் ஒருவர் தூக்கிடு தற்கொலை செய்து கொண்டார். அவர் ஈஷா மையத்தில் ஆறு மாத யோகா பயிற்சியில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்தார்.
உலக அளவில் மண் வளத்தை பாதுகாப்பதற்காக ஈஷா நிறுவனர் சத்குரு தொடங்கி உள்ள மண் காப்போம் இயக்கத்திற்கான 30,000 கி.மீ பயணத்தில் 25,000 கி.மீக்கு மேல் முடித்த சத்குரு ஜக்கி வாசுதேவ் இன்று மும்பைக்கு வந்து சேருகிறார்.
ஆன்மீகவாதியும் சுற்றுச்சூழல் ஆர்வளருமான சத்குரு ஜக்கி வாசுதேவ் 100 நாள் தனி மோட்டார் சைக்கிள் பயணத்தை இந்த ஆண்டு மார்ச் 21ம் தேதி துவங்கினார்.
ஈஷா நிறுவகரான சத்குரு, 26 நாடுகளில் வெற்றிகரமாக விழிப்புணர்வு பயணத்தை முடித்துவிட்டு குஜராத்தில் உள்ள ஜாம்நகர் துறைமுகத்தில் தாய் மண்ணில் கால் வைத்தார்.
உலக அளவில் மண் வளத்தை பாதுகாக்க சட்டங்கள் இயற்றவும், அதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் 100 நாள் மோட்டார் சைக்கிள் பயணத்தை சத்குரு லண்டனில் இருந்து தொடங்கினார்.
மண் வளத்தை பாதுகாக்கும் ஈஷா நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவின் மண் காப்போம் இயக்கத்திற்கு எஸ்செல் குழுமத் தலைவர் டாக்டர் சுபாஷ் சந்திரா ஆதரவுக் கரம் நீட்டியிருக்கிறார்.
உலக அளவில் மண் வளத்தை பாதுகாப்பதற்காக ஈஷா நிறுவனர் சத்குரு தொடங்கி உள்ள மண் காப்போம் இயக்கத்துடன் மொத்தம் 6 கரீபியன் நாடுகள் தங்கள் நாடுகளில் மண் வளத்தை மேம்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ளன.
நதிகளை மீட்போம் இயக்கத்தின் பரிந்துரையின்படி 13 நதிகளுக்கு புத்துயிரூட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், சத்குருவுக்கு மத்திய அமைச்சர் நன்றி தெரிவித்தார்.
வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா அறக்கட்டளை மற்றும் ஈஷா யோகா மையம் வனப்பகுதிகளில் எந்தவித ஆக்கிரமிப்பும் செய்யவில்லை என்று தமிழக அரசு பதிலளித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அனுப்பிய சம்மனை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. புதிய சம்மன் அனுப்பி விசாரணை நடத்த ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
உங்கள் சொந்த புத்திசாலித்தனமே உங்களுக்கு எதிராக செயல்படும் மிக மோசமான நிலையே தற்கொலை ஆகும். ஆகவே, உலகில் உயிர் வாழ்வது தான் உச்சப்பட்ச மதிப்பான செயல் என்பதை உணரும் சமூகத்தையும் கலாச்சாரத்தையும் நாம் உருவாக்க வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.