ராஷ்டிரிய ஜனதா தளம் (RJD) முத்த தலைவர் கேதர் ராய் என்பவர் பீகார் மாநிலத்தில் சுக்னா சாலையில் இன்று (ஆகஸ்ட் 9) காலை நடந்து சென்றபோது மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.
பீகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஷ்வி யாதவ், பீகார் முதல்வர் நிதீஷ் குமார் குறித்து பல கருத்துகளை முன்வைத்துள்ளார்.
அதன்படி அவர் கூறியதாவது நிதீஷ் குமாரின் தற்போதைய அரசாங்கத்தை மிக விரைவில் கலைக்கப்படும், மேலும் அவர் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்வதில் தோல்வி அடைவார் என்றும் கூறினார். நிதீஷ் எங்களுடன் பணியாற்ற விரும்பவில்லை என்றால், அவர் ஏன் இத்தனை காலம் காத்திருந்தார்?என கேள்வி எழுப்பினர்.
மேலும் பனாமா பேப்பர்ஸ் கசிவு வழக்கில் பெயரிடப்பட்ட நபர்கள் அனைவருக்கும் எதிராக விசாரணை நடத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு வேண்டுகோள் வைத்தாரா? என கேட்டுள்ளார்.
இன்று பீகார் மாநில முதல்வராக தவியேற்ற நிதிஷ் குமார், பிரதமருக்கு தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்.
இன்று பீகார் மாநில முதல்வராக மீண்டும் நிதிஷ் குமார் மற்றும் துணை முதல்வராக பாஜகவின் சுசில் குமார் மோடி பதவியேற்றனர். இவர்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதளத்தில் வாழ்த்துக்கள் கூறினார்.
இதற்கு பதிலளித்து பேசிய பீகார் மாநில முதல்வராக பதவியேற்ற நிதிஷ் குமார், வாழ்த்துக்கள் கூறிய பிரதமருக்கு தனது நன்றிகளை தெரிவித்தார். ஊழல் விவகாரத்தில் எந்தவித சமரசமும் இல்லை. மத்திய அரசின் ஒத்துழைப்புடன் நிச்சயமாக பீகார் மாநிலத்தை முன்னோக்கி கொண்டு செல்வோம் என அவர் கூறினார்.
பீகார் மாநில முதல்வராக இன்று மீண்டும் நிதிஷ் குமார் மற்றும் துணை முதல்வராக பாஜகவின் சுசில் குமார் மோடி பதவியேற்றனர்.
பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவரான நிதிஷ் குமார் பீகார் மாநிலத்தின் முதல்வராக நீடித்து வந்தார். துணை முதல்வராக லாலுவின் மகன் தேஜஸ்வி இருந்து வந்தார்.
என்னால் ஊழலைப் பொறுக்க முடிய வில்லை அதனால்தான் நான் ராஜினாமா செய்தேன் என்று என்று நிதீஷ் குமார் கூறியுள்ளார்.
லாலு குடும்பத்துக்கும் - நிதீஷுக்கும் இடையிலான மோதலின் காரணாமாக நிதீஷ் குமாரும், அவரது கட்சி அமைச்சர்களும் அதிரடியாக பதவிகளை ராஜினாமா செய்தனர்.
பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிதீஷ்குமார், ராஜ்பவனில் ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதம் அளித்தார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் கூறுயது:-
பீகார் முதல்வராக நிதிஷ்குமார் இன்று காலை 10 மணிக்கு பதவியேற்றார். நிதிஷ் மற்றும் சுஷில் மோடி இருவர் மட்டுமே இன்று பதவியேற்ப்பு. பீகாரில் நிதிஷ் குமாருக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ள கவர்னர், நிதிஷ் குமார் தனது பெரும்பான்மையை நிரூபிக்க 2 நாட்கள் அவகாசம் அளித்துள்ளார்.
பாஜக ஆதரவுடன் மீண்டும் பீகார் மாநில முதல்வராக பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு ஆளுநர் திரிபாதி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
ரெயில்வேக்கு சொந்தமான ஓட்டல்களை குத்தகைக்கு விட்டதில் நடந்த முறைகேடு தொடர்பாக லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சிபிஐ எப்.ஐ.ஆர். பதிவு செய்து உள்ளது. இந்த லிஸ்டில் பீகார் மாநில துணை முதல்-மந்திரியும், லாலுவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் பெயரும் இடம் பெற்று உள்ளது.
இதனால் எதிர்க்கட்சியான பா.ஜனதா மற்றும் அதனுடைய கூட்டணி கட்சிகள் தேஜஸ்வி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், பத்திரிக்கையாளரை சந்திப்பின் போது, பீகார் துணை முதல்-மந்திரி தேஜாஸ்வியின் பாதுகாப்பு அதிகாரிகள் செய்தியாளர் ஒருவரை தாக்கி உள்ளனர். அந்த வீடியோவை பார்க்கவும்.
14 வயதான பள்ளி மாணவியை ஆறு பேர் கொண்ட கும்பல் கற்பழித்து, ஓடும் ரெயிலில் இருந்து அந்த மாணவியை கீழே தள்ளிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநிலம் தெற்கு பகுதியில் உள்ள லக்கிசராய் மாவட்டத்தில் வீட்டை விட்டு வெளியே வந்த பள்ளி மாணவியை ஆறு பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று கற்பழித்தது. இதை தொடர்ந்து அந்த கும்பல் மாணவியை வலுக்கட்டாயமாக ரெயிலில் ஏற்றிச் சென்றது. அதன்பின், ஓடும் ரெயிலில் இருந்து மாணவியை கீழே தள்ளிவிட்டது.
பீகார் மாநிலத்தில் இரு தினங்களுக்கு முன் பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இதில் கலைப்பிரிவில் 82.6% மதிப்பெண்களுடன் மாநிலத்தில் முதலிடம் பிடித்த கணேஷ் குமார் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
முன்னதாக இசை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு இசை பற்றியே தெரியாதவர் போல பதில் அளித்தார். அதுமட்டுமல்லாமல் அவரது பதில்கள் அனைத்துமே ஏமாற்றம் தரும்படி இருந்தது. இதுகுறித்து பள்ளி கல்வி இயக்குநரகம் அவரிடம் விசாரணையும் நடத்தியது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அழைத்திருந்த கூட்டத்தை புறக்கணித்த பீகார் முதல்வர் நிதீஷ் குமார், பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருக்கும் மொரிசீயஸ் பிரதமர் பிரவீந்த் ஜக்நாத்துடனான மதிய விருந்தில் இன்று கலந்து கொள்கிறார்.
குடியரசு தலைவர் தேர்தல் குறித்து ஆலோசிப்பதற்காக காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியா காந்தி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள பீகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த கூட்டத்தில் தன்னால் பங்கேற்க இயலவில்லை எனக் நிதீஷ் குமார் அனுப்பி வைத்தார்.
ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் மற்றும் அவரது மகன்கள் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறது.
போலி நிறுவனங்கள் மூலம் ரூ.1000 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக லாலு பிரசாத் யாதவ் மீது எழுந்த புகார் தொடர்பாக டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ரேவாரி, குர்கான் உள்ளிட்ட 22 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் 100-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
பீகார் மாநிலத்தில் உள்ள சஹார்சா மாவட்டத்திலிருந்து தலைநகர் பாட்னாவுக்கு செல்ல வேண்டிய சஹார்சா - பாட்னா ராஜ்ய ராணி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை சஹார்சா ரயில் நிலையத்தின் 2வது நடைமேடைக்குள் நுழைந்தபோது இரு பெட்டிகளின் சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு விலகியதால் பெட்டிகளும் பக்கவாட்டில் கவிழ்ந்தன.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால், அந்த பாதையை கடந்து செல்ல வேண்டிய ரெயில் சேவைகள் சுமார் மூன்று நேரத்துக்கு பாதிக்கப்பட்டது.
கவிழ்ந்த பெட்டிகளை நிமிர்த்தி இணைத்த பின்னர் காலை 9.30 மணியளவில் அந்த ரயில் பாட்னாவுக்கு புறப்பட்டு சென்றது.
மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சரான ராம் விலாஸ் பஸ்வான் மூச்சுத் திணறல் காரணமாக, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உபி., மாநிலத்தை ஆளும் சமாஜ்வாதி கட்சியின் வெள்ளிவிழா ஆண்டின் துவக்கவிழா லக்னோ நகரில் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் சரத் யாதவ் முன்னாள் பிரதமர் தேவேகவுடா, பீகார் மாநில முன்னாள் முதல் மந்திரியும் கலந்து கொள்வதற்காக ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் லக்னோ சென்றடைந்தார்.
வட கிழக்கு இந்தியாவின் பல நகரங்களில் இன்று மாலை 4 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கோல்கட்டா, கவுகாத்தி, பாட்னா உள்ளிட்ட நகரங்களிலும் இந்த நில நடுக்கம் உணரப்பட்டது.
இதை அடுத்து மக்கள் அலறி அடித்தபடி வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். பல இடங்களில் கட்டிடங்கள் மற்றும் சாலைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் மியான்மரை மையமாகக் கொண்டு ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.8 பதிவாகி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.